963.

ஆங்கவ னழகுகண் பருக மற்றவன்
றாங்கெழு வனையதோ டழுவித் தன்னொடு
மோங்கிய மழகளிற் 1றும்ப ரேற்றினான்
வீங்கிய கனைகழல் வேந்தர் வேந்தனே.

     (இ - ள்.) வீங்கிய கனைகழல் வேந்தர் வேந்தனே - மிக்க ஆரவாரத்தையுடைய
வீரக்கழல் அணிந்த மன்னர் மன்னனாகிய பயாபதிவேந்தன், ஆங்கு அவன் அழகு கண்
பருக - அவ்விடத்தே அவ்வருக்க கீர்த்தியி்ன் பேரழகைத் தன்னுடைய கண்கள் பருகா
நிற்பவும், மற்றவன் - அவ்வருக்க கீர்த்தியினுடைய, தாங்குஎழு அனைய தோள் தழுவி -
சுமையைத் தாங்குமியல்புடைய தூண்களை ஒத்த தோள்களைத் தழுவிக்கொண்டு,
தன்னொடும் - தன்னுடனே, ஓங்கிய மழகளிற்று உம்பர் ஏற்றினான் - உயர்ந்த
இளமையுடைய அரசுவாவின் எருத்தின் மேல் வீற்றிருக்குமாறு ஏற்றிக்கொண்டான், (எ - று.)

அவ்வாறு வணங்கிய அருக்ககீர்த்தியின் அழகினைப் பருகுவான் போலப் பார்த்துப் பயாபதி
வேந்தன், அவனைத் தன்னோடு அரசுவாவின் எருத்தத்தே ஏற்றிக் கொண்டான்; என்க.

( 137 )