966.

ஆய்நதசீ ரரச ராங்குக் கலந்தபின் னமுத வெள்ளம்
பாய்ந்தது பரவை நன்னீர்ப் பாற்கடல் 3பரந்த தேபோல்
ஏந்திய காதல் கூர வெழினகர் 4பெயர்ந்து புக்கார்
காந்திய கனகப் பைம்பூட் கருவரை யனைய தோளார்.
 

     (இ - ள்.) ஆய்ந்தசீர் அரசர் ஆங்குக் கலந்தபின் - ஆராய்தற்குரிய பெரும்புகழ்
படைத்த இருபால் வேந்தர்களும் அவ்வாறு அளவளாய்க் கலந்த பின்னர், அமுதவெள்ளம்
பாய்ந்தது - அன்பால் பொங்கிய அமிழ்தத்தை ஒத்த இன்பம் வெள்ளமாகப் பெருகிப் பாயா
நின்றது, பரவை நன்னீர் பாற்கடல் பரந்ததேபோல் - விரிந்த நன்னீர்க்கடல்
திருப்பாற்கடலின் கண்ணே புக்குக் கலந்ததே போன்று, ஏந்திய காதல்கூர - இருபகுதியாரும்
வேற்றுமை தோன்றாவாறு மிக்க அன்பாலே கேண்மைகொண்டு, பெயர்ந்து எழில் நகல்
புக்கார் - அவ்விடத்தினின்றும் புறப்பட்டு அழகிய நகரத்திற் புகுந்தனர், (அவர் யாரெனில்)
காந்திய கனகபயைம்பூண் கருவரை அனையதோளார் - சுடருகின்ற பொன்னாலாய பசிய
அணிகலன்களையுடைய கரிய மலை போன்ற சடிமன்னனும் பயாபதியும், (எ - று.)

பரவை நன்னீர்ப் பாற்கடல் - விரிவுடைய நல்ல நீர்மை பொருந்திய பாற்கடல்
எனக்கொண்டு அப்பாற்கடல் பரந்ததேபோல் எழினகர் பெயர்ந்து புக்கார் என முடிப்பதும்
ஒன்று.

(140)