967.

1எழில்கொள்கந் தனைய திண்டோ ளிளையரோ டரச ரீண்டிப்
பொழிலகந் தழீஇய சோலைப் பொன்னர்க் கோயில் புக்குத்
தழுமலர்க் கோதை நல்லார் பலாண்டிசை ததும்ப வாழ்த்தச்
செழுமலர்த் திரள்க டாழுஞ் சித்திர கூடஞ் சேர்ந்தார்.

     (இ - ள்.) எழில்கொள்கந்து அனைய திண்தோள் இளையரோடு - அழகு மிக்க
தூணையொத்த திண்ணிய தோள்களையுடைய விசயதிவிட்டர் முதலிய இளைஞர்களுடனே,
அரசர் ஈண்டி - மன்னர்கள் சேர்ந்து, பொழிலகம் தழீஇய சோலைப் பொன்னகர்க்
கோயில்புக்கு - பூம்பொழிலின் ஊடே ஒருபுடை பற்றிய திருநிலையகம் என்னும்
சோலைக்கண்ணதாகிய அழகிய பொன்னாலியன்ற நகராகிய அரண்மனையிலே புகுந்து,
தழுமலர்க்கோதை நல்லார் இசை ததும்பப் பலாண்டு வாழ்த்த - பிணைந்த மலர்மாலை
புனைந்த மகளிர்கள் இனிய இசை பெருகி ஒழுகும்படி பல்லாண்டு பாடி வாழ்த்தெடுப்ப,
செழுமலர்த் திரள்கள் தாழும் - செழிப்புடைய மலர்க்குழாங்கள் சிதராநின்ற, சித்திரகூடம்
சேர்ந்தார் - சித்திரகூடத்தை எய்தினர், (எ - று.)

சித்திரகூடம் சடிமன்னன் பொருட்டு இயற்றப்பட்டது முன்னர்க் கூறப்பட்டது.

( 141 )