(இ - ள்.) பொருதற்கண் அரிய வேலோய் - போர் ஆற்றுமிடத்தே பகைவரால் வெல்லுதற்கரிய வேற்படையுடையோனே, வருதற்கு முதலும் - யான் இங்கு வருவதற்குரிய காாரணமும், முன்பே - முன்னரே, மருசிவந்து உணர்த்தக் கேட்டாய் - மரீசி என்னும் தூதுவன் வந்து கூறக்கேட்டனை, மேலும்; புராண நூற்புலவர் எல்லோரும், கருதற்கண் அரிய கண்ணி - ஆராயுமிடத்தே பெறற்கரியளாக விளங்கும் சிறந்த கண்களையுடைய சுயம்பிரபை, கடல்வண்ணற்கு உரியள்என்ன - கடல் போன்ற நீனிறவண்ணனாகிய திவிட்டநம்பிக்கே கிழத்தியாம் உரிமையுடையாள் என்று கூறினர்; ஆதலாலே, தருதற்கு மகிழ்ந்து வந்தேன் - அத் திவிட்ட நம்பிக்குரிய பொருளாகிய சுயம்பிரபையை அவனுக்கே அளிக்கும் பொருட்டு மிக்க மகிழ்ச்சியோடு இங்கு வந்தேன், தாழம் ஈங்கு ஒழிக என்றான் - ஆதலால் நீ காலந்தாழ்த்தலைச் செய்யாதொழிக என்று கூறினான், (எ - று.) முதல் காரணம். தாழம் ஒழிக - உயர்வு தாழ்வு கருதி உள்ளம் தாழ்ச்சியுறுதலை நீ தவிர்க்க என்றான் எனினும் ஆம். தாழம்பட்ட ஓசை, குறைந்த ஓசை என்பவாகலின், தாழம் - குறைதல் ஆயிற்று. |