சுயம்பிரபை திவிட்டன்பாற் செல்லும்
கண்களைத் தடைசெய்ய லாற்றாது மயங்குதல்

979.

நீலமா மணிக்குன் றேய்ப்ப நிழலெழுந் திலங்கு மேனிக்
கோலவா 1யரச காளை குங்குமக் குவவுத் தோளான்
மேலவா நெடுங2்க ணோட மீட்டவை விலக்க மாட்டாள்
மாலைவாய் குழலி சால மம்மர்கொண் மனத்த ளானாள்.
 

     (இ - ள்.) நீலமாமணிக் குன்று ஏய்ப்ப - மரகதமணி மலையைப்போன்று, நிழல்
எழுந்து இலங்கும் மேனி - ஒளிவிரிந்து திகழும் நீலமேனியையுடையவனும், கோலவாய்
அரசகாளை - அழகிய திருவாய்மலரினனாகிய அரசன் மகனும் ஆகிய, குங்குமம் குவவுத்
தோளான்மேல் - குங்குமம் அப்பிய திரண்ட தோளையுடைய திவிட்டன்பால், அவாம்
கெடுங்கண் ஓட - காட்சி விதுப்புற்ற தன் நெடிய கண்கள் ஓடுவனவாக, அவை மீட்டு
விலக்க மாட்டாள் - அங்ஙனம் வலிந்து ஓடும் தன் கண்களை மீட்க இயலாதவளாய்,
மாலைவாய் குழலி - மலர்மாலை பொருந்திய கூந்தலையுடைய சுயம்பிரபை,
சாலமம்மர்கொள் மனத்தள் ஆனாள் - மிகுந்த காம மயக்கமுடைய நெஞ்சுடையவளாயினள்,
(எ - று.).

கருமுகில் உருவக்காளை, இன்னவன் என்று சுயம்பிரபை காட்டிய வுடனே, குங்குமக் குவவுத்
தோளான்மேல் அவாம் நெடுங்கண் ஓட, அக்கண்ணை மீட்க வியலாது மயங்கினாள் என்க.

(153)