(இ - ள்.) மங்கையை - சுயம்பிரபையை, வலத்துக்கொண்டு - தன் வலப்பாகத்திலே கொண்டு, மாலையும் குழலும் தோடும் - அவள் அணிந்துள்ள மாலையையும் அவளுடைய அளகத்தையும் தோடுகளையும், அங்கையால் திருத்தி - தனது அழகிய கைகளாலே சீர்திருத்தி, மாமன் - நின் மாமன் (ஆகிய பயாபதி மன்னனின்), அடிகளைப் பணிக என்று - திருவடிகளிலே வீழ்ந்து வணங்குவாயாக என்று கூறி, செங்கயற்கண்ணி தாதை - சிவந்த கயல் மீன்களை ஒத்த கண்ணையுடைய சுயம்பிரபையின் தந்தையாகிய சடியரசன், செவ்விரல் குவியப்பற்றி - சுயம்பிரபையின் செவ்விய விரல்கள் குவியும்படி தன் கைகளால் பற்றி, பங்கயப் பழன நாடன் - தாமரை மலர்ந்த கழனிகளையுடைய சுரமை வேந்தனுடைய, பாத மூலத்து வைத்தான்-திருவடிகளிலே அவள் கரங்கள் பொருந்துமாறு வைத்தான், (எ-று.) சடிமன்னன், நங்கையை வலத்தே கொண்டு திருத்தி, மாமன் அடிகனைப் பணிக என்று, விரல் பற்றி நாடன் பாதத்தே வைத்தான், என்க. |