(இ - ள்.) அருங்கல மகளிர்க்கு ஏற்ற - பெறற்கரிய அணிகலன்களையுடைய மகளிர்களுக்குப் பொருந்திய, அழகெலாம் - புற அழகும் அக அழகும் ஆகிய எல்லாவற்றையும், தொகுத்து - ஒரு சேரக் கூட்டி, இருங்கலி உலகம் மற்றோர் காண - பெரிய ஆரவாரத்தையுடைய உலகின்கண் உள்ள ஏனையோர் கண்டு மகிழும் பொருட்டு, படைத்தவன் - படைப்புக்கடவுள், இயற்றினான் கொல் - இச்சுயம்பிரபை என்பாளைப் படைத்தனனோ!, உலகின் மிக்க மகளிரதுருவம் எல்லாம் - இப்பேருலகத்தே உயரிய உருவச் சிறப்புவாய்ந்த மகளிர்களின் அழகனைத்தும், பெருங்கல அல்குல் தன்பால் - பேரணிகலன்களை அணிந்த அல்குற்றடத்தையுடைய இச் சுயம்பிரபையினிடத்தேதான், புகுந்துகொல் பெயர்ந்தது என்றான் - முதலிற் சென்றெய்திப் பின்னர் ஏனையோரிடத்துச் சென்றதாதல் வேண்டும் என்று இயம்பினான், (எ - று.) அழகிற்கே சுயம்பிரபை பிறப்பிடமாகலின் ஏனைய மகளிர் அழகெல்லாம் இவளிடத்திருந்து சென்று பொருந்தியது என்க. இவ்வாறே “பெண்களா னார்க்கு நல்ல அழகெலாம் பெருக்கி நீட்ட, எண்களால் அளவா மானக் குணந்தொகுத்து இயற்றினாளை,“ எனக் கம்பரும் கூறுவர |