இதுவுமது | 995. | மாதவக் குலத்து ளார்கண் மாதவ சேனை யுள்ளிட் டோதிய பெயரின் மிக்க ருலகறி கலையின் வல்லார் கோதையுங் குழையுந் தோடுங் குளிர்முத்த வடமுந் தாங்கிப் போதிவர் குழலி தாதை பொன்னகர் முன்னி னாரே.க. | (இ - ள்.) மாதவக் குலத்துளார்கள் - பெருமைமிக்க தவப்பள்ளியிலே வதிபவர்களாகிய, மாதவசேனை யுள்ளிட்டு - மாதவ சேனை என்பாளை யுள்ளிட்டு, ஓதிய - கூறப்பட்ட, பெயரின் மிக்கார் - சிறப்புப் பெயர்களையுடையோரும், உலகறி கலையின் வல்லார் - சான்றோர்களால் அறிவதற்குரிய கலைகளிலே வல்லுநரும் ஆகிய ஆரியாங்கனையாரோடும், கோதையும் குழையும் தோடும் குளிர்முத்த வடமும் தாங்கி - மலர்மாலைகளும் தோடுகளும் தண்ணிய நித்திலக்கோவைகளும் (சுயம்பிரபைக்குப் பரிசினிமித்தம்) ஏந்தியவராய், போதிவர்குழலி தாதை - மலர்துதைந்த அளகத்தையுடைய சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின், பொன்னகர் முன்னினார் - அழகிய அரணிமனையை எய்தினார்கள், (எ - று.) தவ வொழுக்கமுடைய மாதவசேனை முதலிய மகளிரோடே, மதுகரி வயந்தசேனை முதலிய மகளிரும், சுயம்பிரபையைக் காண வந்தோர் சடியின் கோயில் எய்தினார், என்க. | ( 169 ) | | |
|
|