பாயிரம்
காப்பு
 
1. வென்றான் வினையின் றொகையாய விரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த வுணர்வின் னொழியாது முற்றும்
சென்றான் றிகழுஞ் சுடர்சூ ழொளிமூர்த்தி யாகி்
நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்.
உரை
   
நூல்நுதலியபொருள்
 
2. அங்கண் ணுலகிற் கணிவான் சுடராகி நின்றான்
வெங்கண் வினைபோழ்ந் திருவச்சரண் சென்ற மேனாட்
பைங்கண் மதர்வைப் பகுவா யரியேறு போழ்ந்த
செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்.
உரை
   
அவையடக்கம்
 
3. கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூறவிப்பால்
உற்றிங்கொர் காதல் கிளரத் தமிழ்நூற்க லுற்றேன்
மற்றிங்கொர் குற்றம் வருமா யினுநங்கள் போல்வார்
அற்றங்கள் காப்பா ரறிவிற் பெரியார்க ளன்றே.
உரை
   
அரங்கேற்றிய இடம்
 
4. நாமாண் புரைக்குங் குறையென்னினு நாம வென்வேல்
தேமா ணலங்கற் றிருமா னெடுஞ் சேந்த னென்னுந்
தூமாண் டமிழின் கிழவன் சுடரார மார்பிற்
கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே.
உரை
   
5. செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த
நங்கண் மறுவு மறுவன்று நல்லார்கண் முன்னர்
அங்கண் விசும்பி னிருள்போழ்ந் தகல்வா னெழுந்த
திங்கண் மறுவுஞ் சிலர்கை தொழச்செல்லு மன்றே.
உரை
   
நூல்வந்த வழி
 
6. விஞ்சைக் கிறைவன் விரைசூழ் முடிவேந்தன் மங்கை
பஞ்சிக் கனுங்குஞ் சிலம்பா ரடிப்பாவை பூவார்
வஞ்சிக் கொடிபோல் பவள்கா ரணமாக வந்த
செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறுமன்றே.
உரை