தொடக்கம் |
|
|
1.நாட்டுச் சருக்கம் | கலிவிருத்தம் | |
7. | மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர் இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது விஞ்சைநீ ளுலகுடன் விழாக்கொண் டன்னது துஞ்சுநீ ணிதியது சுரமை யென்பவே. |
|
உரை
|
|
|
|
|
8. | பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும் மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி அங்கயற் பிறழ்ச்சியு மறாத நீரதே. |
|
உரை
|
|
|
|
|
9. | ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே. |
|
உரை
|
|
|
|
|
10. | நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர் பொழிலகம் பூவையுங் கிளியும் பாடுமே குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர் மழலையும் யாழுமே மலிந்த மாடமே. |
|
உரை
|
|
|
|
|
11. | காவியுங் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ் ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர் நாவியுங் குழம்புமுண் ணகில் நற்றவம் மேவிநின் றவரையு மெலிய விம்முமே. |
|
உரை
|
|
|
|
|
12. | வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த் தேனிலங் கருவிய திணையுந் தேறல்சேர் பானலங் கழனியுங் கடலும் பாங்கணி நானிலங் கலந்துபொன் னரலு நாடதே. |
|
உரை
|
|
|
|
|
ஒலிகளின் சிறப்பு குறிஞ்சி வேறு | |
13. | முன்றி லெங்கு முருகயர் பாணியும் சென்று வீழரு வித்திர ளோசையும் வென்றி வேழ முழக்கொடு கூடிவான் ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம். |
|
உரை
|
|
|
|
|
14. | ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர் கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல் காறு கொண்டவர் கம்பலை யென்றிவை மாறு கொண்டு சிலம்புமொர் மாடெலாம். |
|
உரை
|
|
|
|
|
15. | அணங்க னாரன வாடன் முழவமும் கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும் மணங்கொள் வார்முர சும்வய லோதையும் இணங்கி யெங்கு மிருக்குமொர் மாடெலாம். |
|
உரை
|
|
|
|
|
16. | கலவ ரின்னி யமுங்கட லச்சிறார் புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும் நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய் உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம். |
|
உரை
|
|
|
|
|
2. மலர்களின் சிறப்பு குறிஞ்சி | |
17. | கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண் மெய்வி ரிந்தன வேங்கையுஞ் சோர்ந்ததேன் நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம். |
|
உரை
|
|
|
|
|
18. | கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும் முன்றி லேறிய முல்லையம் பந்தரும் நின்று தேனிரந் தூத விரிந்தரோ மன்றெ லாமண நாறு மருங்கினே. |
|
உரை
|
|
|
|
|
19. | நாற விண்டன நெய்தலு நாண்மதுச் சேறு விண்டசெந் தாமரைக் கானமும் ஏறி வண்டின மூன்ற பிலிற்று தேன் ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம். |
|
உரை
|
|
|
|
|
20. | "காடு டந்தன தாழ"ங் "காழிருள்
"மாடு டந்தன மூரிக் குவள"ம்
"தாடு டந்தன வாம்பலுங் கற்பகக்
காடு டந்தன "பான்றுள கான"ல.
|
|
உரை
|
|
|
|
|
3. பறவைகளின் சிறப்பு குறிஞ்சி | |
21. | நீல வால வட்டத்தினி றங்கொளக் கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல் ஆலு மாமழை நீண்முகி லார்த்தொறு மாலு மாமயி லாலுமொர் பாலெலாம். |
|
உரை
|
|
|
|
|
22. | நக்க முல்லையு நாகிளங் கொன்றையும் உக்க தாதடர் கொண்டாலி வண்டறா எக்கரீர்மணற் கிண்டி யிளம்பெடைப் பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம். |
|
உரை
|
|
|
|
|
23. | துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு கள்ள றாதசெந் தாமரைக் கானகத் துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப் புள்ள றாது புலம்பின பொய்கையே. |
|
உரை
|
|
|
|
|
24. | வெண்மு ளைப்பசுந் தாமரைச் செஞ்சுருள் முண்மு ளைத்திர ளோடு முரிந்துகொண் டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால் கண்மு ளைத்த தடத்த கழியெலாம். |
|
உரை
|
|
|
|
|
4.விலங்கு முதலியவைகளின் செயல் குறிஞ்சி | |
25. | காந்த ளங்குலை யாற்களி வண்டினம் கூந்த லம்பிடி வீசக் குழாங்கேளா டேந்து சந்தனச் சார லிருங்கைணமா மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம். |
|
உரை
|
|
|
|
|
26. | தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண் டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக் கார்செய் காலை கறித்தொறு மெல்லவே போர்செய் மாவின பூத்தண் புறணியே. |
|
உரை
|
|
|
|
|
27. | அள்ளி லைக்குவ ளைத்தட மேய்ந் தசைஇக் கள்ள லைத்த கவுட்கரு மேதிபால் உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலாற் புள்ள லைத்த புனல புலங்களே. |
|
உரை
|
|
|
|
|
28. | கெண்டை யஞ்சினை மேய்ந்து கிளர்ந்துபோய் முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா வண்டல் வார்கரை மாமக ரக்குழாம் கண்டு நின்று கனலுங் கழியெலாம். |
|
உரை
|
|
|
|
|
5. விளைவின் வளம் குறிஞ்சி | |
29. | கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையு மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும் எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும் உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே. |
|
உரை
|
|
|
|
|
30. | பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர் தாழ்த்த காயின தண்ண வரைக்கொடி சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே. |
|
உரை
|
|
|
|
|
31. | மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்
தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
காடு கொண்டுள கண்ணக னாடெலாம். |
|
உரை
|
|
|
|
|
32. | சங்கு நித்தில முந்தவழிப் பியும்
தெங்கந் தீங்குலை யூறிய தேறலும்
வங்க வாரியும் வாரலை வாரியும்
தங்கு வாரிய தண்கட னாடெலாம். |
|
உரை
|
|
|
|
|
33. | கொடிச்சியர் புனத்தயற் குறிஞ்சி நெய்பகர்
இடைச்சியர் கதுப்பயற் கமழு மேழையங்
கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்
தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோன்றுமே. |
|
உரை
|
|
|
|
|
34. | கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்
புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே. |
|
உரை
|
|
|
|
|
35. | மாக்கொடி மாணையு மௌவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும் தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே. |
|
உரை
|
|
|
|