|      அறமே பாவங்கள் அனைத்தினையும் போக்கும்; கடவுள் உலகிற்    சேர்க்கும்; சிவபிரானுக் கோர் வடிவமும் ஆகும் சிவனை வணங்குவோர்க்கு
 வரும் பெரும் பயன் யாவுமே அறம் ஏன்று அளிக்கும்; யாவர்க்கும்,
 எவ்விடத்தும் அச்சத்தைத் தவிர்ப்பதும் அவ்வறமே எனச் சாதாதப முனிவன்
 பேசினன்.
     கொடை	 		| கொடையே எவர்க்கும் எப்பேறுங் கொடுக்கும் நெறியிற் பிறழாத கொடையே யாருந் தன்வழியின் ஒழுகச் செய்யும் குறைதீர்ந்த
 கொடையே பகையை  உறவாக்கும் குலவும் பூதம் அனைத்தினையுங்
 கொடையே புரக்கும் என்றுள்ளங் கொள்ளப் புகன்றான் கவுதமனே.
 15
 |       கொடுத்தலானே யாவர்க்கும் எப்பயனும் கிடைக்கும்; அறவழியிற்     றப்பாத கொடைக்குணமே யாவரையுந் தன் வழிப்படுத்து நடத்தும் (தன் ஏவல்
 கேட்பிக்கும்). குற்றந் தவிர்ந்த கொடையே பகைவரையும் உறவினராக்கும்;
 விளங்குகின்ற ஆன்மாக்கள் அனைத்தினையும் அதுவே காக்கும் என்றுள்ளங்
 கொள்ளும்படியாகக் கவுதமன் கூறினன்.
     வாய்மை	 		| மெய்யே சிறந்த பெருநலமாம் மெய்யே எவையும் நிலைபெறுத்தும் மெய்யால் அழல்கால் கதிர்பிறவும் தத்தந் தொழிலின் விலகாவாம்
 மெய்யே எவைக்கும் இருப்பிடமாம் மெய்யே மெய்யே சிவமாகும்
 மெய்யே பிரம பதமுமெனப் புகன்றான் வினைதீர் காசிபனே.    16
 |       உண்மையே சிறந்த பெரு நன்மைக்கு ஏதுவாம்; எவற்றையும்     நிலைநிறுத்தும்; நெருப்பு, காற்று, சூரியன் முதலிய பிறவும் தத்தம் தொழிலை
 நியதியாகச் செய்யவும் அதுவே ஏதுவாம்; சத்தியமே எவற்றினுக்கும்
 ஆதாரமாம்; அதுவே சத்தியமாகச் சிவமாகும்; மெய்யே பெரும் பதமும்
 எனப்பேசினார் காசிப முனிவர்.
     வேள்வி	 		| எச்சம் ஒன்றே இருமையினும் மேலாம் இமையோர்க் குவப்பாவ தெச்சம் ஒன்றே மகத்திறையாம் எம்மான் விழையப் படுவதுவும்
 எச்சம் ஒன்றே நனிசாலச் சிறந்த பொருளும் இருங்கரும
 எச்ச நிகர்வே றில்லையெனப் பரத்து வாசன் இயம்பினனால்.    17
 |       வேள்வி ஒன்றே இம்மையினும், மறுமையினும் நலம் பயக்கும்     அவ்வேள்வியே கண்ணிமையாராகிய தேவரை மகிழ்ச்சியுறச் செய்வதும்;
 வேள்விக்குத் தலைவனாகிய எமது சிவபெருமானால் விரும்பப்படுவதும்
 அதுவே. மிக மிகச் சிறப்புடைய கருமமாகிய வேள்விக்கொப்பது வேள்வியே.
 அதற்கொப்பது வேறில்லை எனப் பரத்துவாச முனிவர் கூறினர்.
      ஏகாரங்கள், பிரிநிலையொடு தேற்றமாம். சற்கருமங்களின் வேள்விமிகல்;    ‘‘எச்சத்தின் வேறாம்ஏனைக் கருமங்கட் கெச்சம் போல” (தக்கேசப்
 |