| 			அறுசீரடி யாசிரிய விருத்தம் 		| உடுவணி குடுமிக் கோடு பிளவுபட் டுடையப் பெய்யுங் கொடுமழைக் காற்றா தங்கட் குளிர்பெயல் மாற எண்ணி
 நெடுமலை எடுத்துக் காட்டு நெட்டிதழ்க் காந்தட் கொள்ளி
 விடுசுடர்க் கனலி அந்தப் புனலொடும் வீந்த தன்றே	    11
 |       விண்மீன்கள் தவழ வளர்ந்த மலைச்சிகரங்கள் பிளவு படப் பெய்யும்    கொடிய மழையைப் பொறாத நந்திமலை அம்மழையைத் தவிர்க்கும் உபாயம்
 நாடிக் காந்தளாகிய கொள்ளிக்கட்டையை எடுத்துக்காட்ட அக்கொள்ளியொடு
 மழையும் கெட்டது.
      மழையை நிறுத்தக் கொள்ளி காட்டல் வழக்கு. உடு-நட்சத்திரம்	 		| போதம்மே லாகப் பண்டே புல்லிய மலநோய் தீர்ந்தும் வாதனை தாக்கு மாபோல் மழைப்பெயல் மாறித் தீர்ந்துங்
 காதல்செய் துறையும் புள்ளும் மாக்களும் கவன்று நெஞ்சம்
 நோதக மரங்க ளெல்லாம் நுண்துளி துவற்றும் மாதோ.	  12
 |       மெய்யறிவு மேலிட அநாதியே பற்றியுள்ள மலவலி கெட்டும் வாசனை    தாக்கித் துன்புறுத்துவ தொப்பத், தம்மை விரும்பிச் சார்ந்து வாழும் பறவை
 விலங்கினங்கள் மனம் வருந்த மரங்கள் துவலையைத் துவற்றும்.
      ‘அடை மழை விட்டும், செடி மழை விடவில்லை’ என்பது வழக்கு.	 		| கனைபெயல் எழிலிக் கூட்டங் கலிவிசும் பகடு போழ்ந்த நனைமுடி நந்திக் குன்றம் நளிபடப் பொழியுந் தெண்ணீர்
 புனைமறை வசிட்ட மேலோன் செருத்தல்ஆன் பொழிந்த தீம்பால்
 வனைபுகழ் வெள்ள மென்னத் திசைதொறும் வழிந்த மன்னோ.	  13
 |       செறி பெயலைக் கொண்ட மேகங்கள், தேனடை சூழ்ந்த நந்திமலை    குளிர்ச்சியுறப் பொழியும் நீர் வசிட்ட முனிவர்வழி நிற்கும் காமதேனுப்
 பொழிந்த இனிய பால் வடிவெடுத்த புகழதுபெருக்கம் போலத் திசை தொறும்
 வழிந்தன.
      கலி-ஒலி, விசும்பின் குணம். அகடு-நடுவிடம், செருத்தல்-மடி.	     பாலியாற்று வளம்	 		| கண்ணகன் குடுமிக் குன்றிற் கல்லெனக் கறங்கி ஆர்த்து விண்ணிவர் ஏணி யென்ன வியன்முடி தொடுத்து வீழுந்
 தண்ணறா அருவி யெல்லாந் தலைத்தலை விரிந்து சென்று
 புண்ணியப் பாலி யாற்றிற் சேர்ந்துடன் போய மாதோ.	   14
 |  |