|      பலவாக விரித்துரைப்பது என்னை நெஞ்சானும் பிற தெய்வங்களை    நினையாது விலக்கி அரனையே அன்பொடு துதிசெய்; இதுவே முத்திக்குக்
 காரணமா மென்னும் பிருகற்பதியின் வார்த்தையை மனங்கொண்டு சிவி
 யென்னும் இந்திரன் வினவுவான்.
      நெஞ்சினும் என்புழி உம்மை, எச்சத்தோடு இழிவு சிறப்பு. பொன்    போலும் உரையென்னும் நயங்கொள்க. அரன்-பாசங்களை அரிப்பவன்.
 		| குரவனே அயன்அரி குரவ னேசிவன் குரவனே தந்தைதாய் குரவ னேயெலாம்
 குரவனே என்று நூல் கூறும் உண்மையைக்
 குரவனே என்னிடை இன்று காட்டினாய்          31
 |       ஆசிரியனே பிரமன், ஆசிரியனே திருமால்; அவனே; தந்தை;     அவனே தாய்; அவனே நண்பன் முதலானோர் யாவரும் என்று நூல் கூறும்
 உண்மைப் பொருளை ஆசிரியனே நீ என்னிடத்தில் இன்று உணர்த்தினை.
      இவர்கள் வாயிலாகப் பெறும் நலமெல்லாம் குரவனின் வழிப்பெறும்     நன்மைக்குத் துணை செய்தலின் இங்ஙனம் கூறினார்.
 		| உன்பெருங் கருணையால் உறுதி பெற்றுளேன் இன்பொடும் எவ்விடத் தெவ்வி திப்படி
 பொன்பொதி சடையனைப் போற்று மாறிது
 அன்பொடும் அடியனேற் கருளு கென்றலும்.     32
 |       உனது பேரருளால் உறுதிப் பொருளைப் பெற்று உளன் ஆயினேன;்      மகிழ்ச்சி யொடும் எத்தலத்தில் எம்முறைப்படி பொன்போலும் நிறங்கொண்ட
 பொதிந்த சடையையுடைய பெருமானை வழிபடு முறையை அன்போடும்
 அடியேற் கருளுக என்று சிவி கூற.
 		| கடலுடை வரைப்பினிற் காஞ்சி மாநகர் இடனுடைக் குணக்கினில் எய்தி னாரெலாம்
 விடலருஞ் சத்திய விரத தானத்தின்
 முடிவில்சத் தியவிர தேசன் முன்பரோ.         33
 |       கடலை ஆடையாகவுடைய நிலவுலகிற் காஞ்சி மாநகரில் இடம் விரிந்த    கிழக்கெல்லையில் சார்ந்தோர் யாவரும் நீங்குவதற்கரிய சத்திய விரதீசர்
 திருமுன்னர்,
      ‘‘மேவினார் பிரியமாட்டா விமலனார்‘‘ (திருத். கண்ண-34).	 		| மேற்றிசைச் சத்திய விரத தீர்த்தம்ஒன் றாற்றவும் மேன்மைபெற் றுடைய தாயிடைப்
 போற்றுறும் பசுபதி விரதம் பூண்டுசென்
 றூற்றெழுந் துறுதடத் துதகம் ஆடியே.         34
 |  |