| 		| ஒருபொழு தாடினர் உம்பர் கோனிடம் இருபொழு தயனிடம் எண்ணும் முப்பொழு
 தரியிடம் நாற்பொழு தாயின் முத்தியே
 மருவுவர் யார் அதன் வண்மை கூறுவார்.       39
 |       ஓர் பொழுது சத்திய விரதத்தில் நீராடினர் இந்திரபதம் பெறுவர்;    இருபொழுது மூழ்கினோர் பிரமபதம் அடைவர்; முப்பொழுது மூழ்கியோர்
 திருமால் பதவியைப் பெறுவர்; நாற்பொழுது மூழ்கினராயின் வீட்டினைத்
 தலைப்படுவர். அத்தீர்த்தத்தின் கொடைக்குணத்தையாவர் கூற வல்லவர்.
 		| புந்திநாள் முழுகுநர் புகுவர் முத்தியின் அந்தநாள் மூழ்கலின் அரச நீயும்இப்
 பந்தமில் வீடுறற் பாலை யாயினை
 மந்தணம் இதுவெனக் கேட்ட வாசவன்.         40
 |       அரசனே, புதன்கிழமை அத்தீர்த்தத்தில் மூழ்குவோர் முத்தியைத்     தலைப்படுவர். நீயும் அந்நாளில் மூழ்கினமையால், இப்பாச மில்லாத
 வீட்டினை அடைதற்குரிமை உடையை ஆயினை; இதுவே இரகசியம்
 (உட்கிடை) எனக் கூறச் செவிமடுத்த இந்திரன்,
      பந்தம் இல் வீடு-‘முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட    சிவனடியைச் சேரும் முத்தி’ (சிவ-சி-264) பந்தம் உள்ளன: ‘இம்மையே’
 என்னுஞ் செய்யுளினும் (சிவஞான சித்தியார்) ‘அரிவையர்’ என்னும்
 செய்யுளினும் (சிவப்பிரகாசம்) காண்க. மந்தணம்-இரகசியம் (தலவிசேடப்
 படலம் 31.)
 		| இப்பெருந் தீர்த்தநீர் எற்றை ஞான்றினும் அப்புத வாரநாள் அதிக மாயதென்
 செப்புதி என்றலுந் தேசி கப்பிரான்
 ஒப்பறு கருணையின் உரைத்தன் மேயினான்      41
 |       சத்திய விரத தீர்த்தநீர்க்கு மற்றைய ஆறுநாட்களினும் புதன் கிழமை    சிறப்பு மிகுவது என்னை? அதனைக் கூறுக எனலும் ஞான மூர்த்தியாகிய
 குரு உவமையில்லாத பெருங் கருணையினாலே உரைத்தலை விரும்பினார்.
 வாரம்-உரிமை.
     புதன் வழிபட்ட வரலாறு	 கொச்சகக் கலிப்பா	 		| மதிக்கடவுள் தாரைதனை மணந்தீன்ற மகவான புதக்கடவுள் கிரகநிலை பெறுவதற்குப் புரிதாதை
 கதித்துரைத்த மொழியாறே கருதருஞ்சத் தியவிரதப்
 பதிக்கண் அணைந் துயர்தீர்த்தம் படிந்தாடித் தவஞ் செய்தான். 	42
 |  |