|      சக்கரப் படையை வீசினன்; அம்முதலையின் உயிரைக் கொண்டனன்;     கஜேந்திரனுடன் புண்ணிய கோடீச தலத்தை அடைந்து அக்கஜேந்திரன்
 அளிக்கும் மேன்மை பொருந்திய பூமாலை கொண்டு சிவபூசை விதிப்படி
 செய்து, பெருந்தவம் செய்து அங்குறுநாள்;
 		| எண்ணரு வானோர் இன்னமும் நாடற் கரியானைக் கண்ணிணை ஆரக் காண்டகு காதல் கைமிக்கங்
 குண்ணிகழ் அன்பால் நெக்குரு கிக்கண் உறைசிந்தப்
 புண்ணிய வேதப் பழமொழி ஓதிப் புகழ்கிற்பான்.     15
 |       அளவிடற்கரிய தேவர்இன்றுந் தேடற்கரிய பரமனை இருகண்களாலும்    பொருந்தக் காணுதற்குப் பெருவிருப்பம் கைகடந்தெழ உள்ளத்து நிகழும்
 அன்பு காரணமாக நெகிழ்ந்து உருகிக் கண்நீர்த் துளிகள் துளிப்பப்
 புண்ணியந் தரும் வேதப் பழம் பாடலை ஓதிப் புகழ்கிற்பான்.
      ஓதுதற்கிலக்கணம்; ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்,     என்புழிக் காண்க,
     திருமால் துதித்தல்	 கொச்சகக் கலிப்பா	 		| நீராய் நிலனாய் நெருப்பாய் வளிவானாய் ஏரார் இருசுடராய் ஆவியாய் யாவைக்கும்
 வேராகி வித்தாய் விளைவாகி எல்லாமாம்
 பேராளா எங்கள் பிரானே அடிபோற்றி.         16
 |       நீரும், நிலனும், நெருப்பும், காற்றும், வானமும், விசும்பிடை எழுதரும்     சந்திர சூரியரும், ஆன்மாக்களும் ஆம் இவைகளாகியும், எவற்றினுக்கும்
 மூலமாகியும், காரணமும் காரியமும் ஆம் எல்லாமாகியும் நிற்கும்
 பெருமையனே! எங்கள் தலைவனே! நின் திருவடிக்கு வணக்கம்.
      எண்வகை வடிவு விளக்கம்; (திருவே. 67,68,69,)	 		| அண்டபகி ரண்டம் அனைத்தும் அகத்தடக்கிக் கொண்டுநிறைந் தோங்கியபே ரின்பக் குரைகடலே
 தொண்டரெலாம் உண்ணத் தெவிட்டாச் சுவைஅமிர்தே
 தண்டலைசூழ் கச்சித் தலைவா அடிபோற்றி.        17
 |       இந்த அண்டத்தையும், பிற அண்டங்களையும், தன்னுட்கொண்டு     நிறைந்து உயர்ந்த பேரின்பமாகிய கடலே! மெய்யடியர் யாவரும் மேன்மேற்
 பருகவும் விருப்புக்குறையாத சுவையினையுடைய அமிழ்தே! சோலை சூழ்ந்த
 கச்சி நகர்க்குத் தலைவனே நின் திருவடிகளுக்கு வணக்கம்.
      பேரின்பமாகிய கடல் ஒலித்தலின்மையின் குரை இன அடை,	 		| மாறா அறக்கடவுள் மான அடியேனும் ஏறாகித் தாங்க அருள்சுரந்த எம்மானே
 சீறா துமைகளிப்பத் தேவியாக் கொண்டெனைநின்
 கூறாட வைத்தகுணக் குன்றே அடிபோற்றி.       18
 |  |