|      அரசர் குலத்தில் தோன்றி வசிட்ட முனிவர் சாபத்தினால் மிண்டு    செறியும் அரக்கனாம் சுதாசன் என்னும் பெயரினையுடையவன் தன்னை
 அழைத்துத் தூண்ட வன்கண்மையுடைய அவன் எய்தி அவர் நூற்று
 வரையும் எடுத்து விழுங்கினான்.
 		| வடமீனவ ளோடும் வசிட்டன்அது கேட்டுப் படர்கூர்ந்தழு தேங்கி ஆற்றிப்பறம் பேறிப்
 புடவிமிசை வீழப் பூமாதுளம் நெக்காள்
 உடல்விண்டொழி யாமே தாங்கிஉய் வித்தாள்.     	5
 |       அருந்ததியோடும் வசிட்டன் அதனைக் கேட்டறிந்து துன்பம்மிக்கு     அழுதிரங்கித் தவிர்ந்து மலைமேலேறி அங்கிருந்து உயிரை விடும்
 பொருட்டுப் பூமியில் வீழ உடம்பு சிதைந்தொழியாதவாறு நிலமகள் உளம்
 நெகிழ்ந்து தாங்கி உயிர் பிழைக்கச் செய்தனள்.
 		| வன்பர்ப்பதம் ஏறி வீழ்ந்தும்மா யாமே		அன்பிற்புவி தாங்க அயர்ச்சிதெளிந் தேங்கி இன்பமக வெல்லாம் இழந்தசோ கத்தால்
 துன்பக்கரை காணார் புலம்பிச்சோர் காலை.        6
 |       திண்ணிய மலைமிசை ஏறி வீழ்ந்தும் இறவாதபடி பூமிதேவி அன்பினால்     தாங்க அவசம் தெளிந்து இரங்கி மனையறத்தில் இன்பமிகும் மக்கள்
 நூற்றுவரையும் இழந்த புத்திரசோகத்தால் துயரக்கடலில் மூழ்கினோர்
 அதனினின்றும் உய்யும் வழி காணாராய் வருந்தித் தளரும்போது,
 பராசரர் பிறத்தல்	 		| கொன்னும்வசிட் டன்தன் குலமைந்தரின் மூத்தோன் மன்னுந்தவச் சத்தி யென்பான்மனை யாட்டி
 அன்னசெயல் கேளா அரற்றிக்கருப் பத்தால்
 துன்னும்வயி றெற்றிப் புரளுந்துயர் கண்டான்.           7
 |       மனவலி யிழந்த வசிட்ட முனிவரர் பெருமை பொருந்திய மக்களின்     மூத்தோராய நிலைபெறுந் தவத்தினையுடைய சத்தி முனிவர்தம் வாழ்க்கைத்
 துணைவி தன் கணவனாரும், மைத்துனர் தொண்ணூற்றொன்பதின்மரும்
 துஞ்சிய செய்தி அறிந்து பெருக அழுது கருவுற்றிருத்தலால் இறுகும்
 வயிற்றிடை மோதிப் புரளுந் துன்பத்தினைக் கண்டான்.
 		| ஆவாஎன் செய்தாய் அந்தோகெட் டேன்என் தாவாச்சந் தானத் தானந்தனை எற்றி,
 மூவாக்குலம் முற்றும் முடிக்கமுயல் கின்றாய்
 பாவாய்என நைந்து கூறப்பணைத் தோளி.          8
 |  |