| 		| எறுழ்விடைப் பரிமிசை எந்தை எந்தைஓர் குறுவலி அரக்கனாற் கோட்பட் டான்அவன்
 உறுகுல முழுவது மறலி ஊர்புகத்
 தெறுவரம் எனக்கருள் செய்ய வேண்டுமால்.     	23
 |       வலிமை அமைந்த விடையாகிய ஊர்தி மேல்விளங்கும் எந்தையே! என் தந்தையாகிய சத்திய முனிவன் ஓர் அற்பவலியுடைய அரக்கனாற்
 கொலையுண்டனன். அவன் தோற்றிய அசுர குலமுழுதும் இயமனுடைய
 ஆளுகைக்குட்பட; அழிக்கின்ற ஆற்றலை அடியேனுக்கருள் செய்யவேண்டும்.
      எந்தை-இறைவன் உயிர்த்தந்தையாய்ப் பெத்த முத்தியினும் அருள்    வோன்; சத்திய முனி உடற்றந்தையாய் இப்பிறப்புத் தோன்ற இறைவன்
 படைப்பிற்குக் கருவியாய் நின்றவன்.
 		| ஈண்டுநீ இனிதமர்ந் தெவர்க்கும் இன்னருள் மாண்டகு சிறப்பினின் வழங்க வேண்டுமால்
 ஆண்டகை என்றிரந் தன்பு மேதக
 வேண்டலும் எம்பிரான் விளம்பல் மேயினான்.     24
 |       ‘ஆண் தகையே! நீ விரும்பி வீற்றிருந்து யாவர்க்கும் திருவருளை    மாட்சிமை அமைந்த சிறப்பொடும் வழங்க வேண்டும்’ என் றிரந் தன்பு
 மேம்பட வேண்டிய காலை எமது பெருமான் எடுத்தோதினர்.
 பராசரர் வரம்பெறல்	 		| மைந்தநின் பூசையில் தம்பி மாரொடு நுந்தைமற் றெமைஅடைந் துற்று நோன்மைசால்
 அந்தண னாம்உனைக் காணும் ஆசையின்
 முந்துற நின்றவா காண்டி மொய்ம்பினோய்.      25
 |       ‘மைந்தனே! நின்னுடைய பூசனையின் பயனாகத் தம்பிமாரொடும்     உனது தந்தை எம்மைச்சார்ந்து வலிமை அமைந்த அந்தணனாகும்
 உன்னைக் காணவேண்டும் விருப்பினால் முற்பட நின்றவகையைக் காணுதி;
 தவவன்மையுடையோனே!
      மகன்செய் பூசனை தந்தையையும், சிறிய தகப்பன்மாரையும்    சிவதரிசனத்திற்குரிமைப் படுத்தியது. பண்புடை மக்களை ஈன்றதன் பயன்
 (திருக்.    )
 		| அரக்கரைக் கொலைசெயும் வேள்வி யாற்றிஅந் நெருப்பினில் அவர்தமை நீறு செய்திஇவ்
 வரைப்பினில் என்றும்நாம் மகிழ்ந்து வாழ்துமென்
 றுரைத்தனன் மறைந்தனன் வேதத் துச்சியில்.     26
 |  |