| ஆதீபிதேசப் படலம்	 கலி விருத்தம்	 		| பராரை மாநிழற் பண்ணவன் மேவிவாழ் பராச ரேசம் பகர்ந்தனம் மாதவன்
 பராய பைம்பொழில் ஆதீபி தேச்சரம்
 பராக மாவினைப் பற்றற ஓதுவாம்.               1
 |       பருத்த அடியினையுடைய ஒற்றைமா நிழலில் எழுந்தருளியுள்ள     திருவேகம்பப் பெருமான் விரும்பி யுறைகின்ற பராசரேசம் என்னும்
 தலத்தினைப் பற்றிப் பேசினோம். திருமகள் நாயகன் வணங்கிய பசிய
 சோலையில் உள்ள விளக்கொளிப் பெருமான் வரலாற்றை வினையாகிய
 தொடக்குப் பொடிபட ஓதுதலைச் செய்வாம்.
 		| அன்ன ஊர்தி மகத்தை அழிப்பல்என் றுன்னி வாணி நதிஉருக் கொண்டநாள்
 கன்னி பால்வளர் கண்ணுதல் ஏவலின்
 முன்னர் ஏகி முகுந்தன் தடுத்தனன்.             2
 |       ‘அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் வேள்வியை அழிப்பேன்’     என்று மதித்துச் சரசுவதி நதி வடிவு கொண்ட நாளில் உமையம்மையை
 இடங்கொள் கண்ணுதலோன் திருஆணையின் வெள்ளம் வருமுன் எதிர்
 சென்று திருமால் தடுத்தல் செய்தனன்.
 		| அங்கங் கெய்தித் தடுத்தும் அடங்கிடாப் பொங்கு வேகப் புதுநதி நள்ளிராத்
 துங்கக் காஞ்சியில் துண்ணெனத் தோன்றலுஞ்
 சங்க பாணி தளர்ந்தழி வுற்றரோ.               3
 |       பல விடங்களிற் சென்று தடுத்தும் மடங்காது பொங்கி எழுந்த    வேகவதி என்னும் புதிய நதி நடு இரவில் உயர்ச்சி மிகு காஞ்சிநகர்க்கண்
 அச்சந்தோன்றத் தோன்றலும் பாஞ்ச சன்னியத்தைக் கைக்கொண்ட திருமால்
 உள்ளம் சோர்ந்து அழிவெய்தி,
 		| பெருவி ளக்கொளி யாகிப் பிறங்கிமற் கருணை மால்கரி காத்தவன் சூழலின்
 அருகு மேற்றிசை ஆதீப தேசமென்
 றொருசி வக்குறி உங்கண் இருத்தியே.            4
 |  |