| 	திரிகால ஞானேசம்	 		| அனைய சூழலின் குணாதுமுக் காலமும் அறிவான் முனிவர் சிற்சிலர் எய்திமுன் இலிங்கம்ஒன் றிருத்தி
 இனிய பூசனை இயற்றிட அவர்க்கது ஈந்தார்
 கனியும் அன்பருக் கருளும்முக் காலஞா னேசம்.     21
 |       அத்தகைய வரைப்பினுக்குக் கிழக்கின் கண்ணது முக்காலங்களையும்     அறியும் அறிவு பெறற் பொருட்டு முனிவரர் சிலர் அடைந்து சிவலிங்கம்
 நிறுவி இனிய சிவபூசனையைப்புரிய அவர் தமக்கு முக்கால உணர்வை ஈந்த
 பிரானார் பழுத்த அன்பினர்க்கு அருளுதல் புரியும் திரிகால ஞானேசம்.
 மதங்கேசம், அபிராமேசம்	 		| விதந்த மற்றிதன் வடக்கது வெம்புலன் அடங்க மதங்க மாமுனி அருச்சனை புரிமதங் கேசம்
 அதன்கு டக்கபி ராமேசம் அச்சுதன் குறளாய்ச்
 சிதைந்து மாவலி தபத்தெற வழுத்திய வரைப்பு.    22
 |       எடுத்தோதிய இம்முக்கால ஞானேசத்தினுக்கு வடக்கில் உள்ளது     கொடிய ஐம்புலன்களுமடங்க மதங்கமாமுனிவர் வழிபாடு செய்த மதங்கேசம்;
 அதற்கு மேற்கில் திருமால் வாமனவடிவினனாய் மாவலி சிதைந்துகெடும்படி
 அழிக்கத் துதிசெய்த தலம் அபிராமேசம் உள்ளது.
      வெம்மை-விருப்பமும் ஆம். அச்சுதன்-அழியாதவன்; திருமால்.    காயாரோகணப் படலம் காண்க. அபிராமேசப் படலம் பின்வரும்.
 ஐராவதேசம்	 		| அத்த ளிக்குட பாலதன் றிமையவர் கடைபோ தத்தி மேலெழும் வெண்கரி அருச்சனை ஆற்றி
 அத்தி கட்கர சாகிவிண் அரசினைத் தாங்க
 அத்த னார்அருள் பெறும்அயி ராவதேச் சரமால்.  	23
 |       தேவர்கள் திருப்பாற் கடலைக்கடைந்த அந்நாளில் அக்கடலில்    தோன்றிய ஐராவதம் எனப்பெறும் வெள்ளையானை அருச்சனை செய்து
 யானைகளுக்கு எல்லாம் அரசு என்னும் தெய்வத்தன்மை பெற்று இந்திரன்
 ஊர்தியாகச் சிவபிரானை அருச்சித் தருள் பெறும் ஐராவதேசம்
 அபிராமேசத்திற்கு மேற்குத்திசையில் உள்ளது.
      அத்தி முன்னதுகடல்; பின்னது யானை.	 இவைகளின் பெருமை	 		| துவற்று தேத்துளி துறுமலர்ப் பொதும்பர்சூழ் கிடந்த இவற்றுள் ஒன்றனில் எந்தைதாள் வழிபடப் பெற்றோர்
 கவற்றும் வல்வினைப் பிறவிவித் தாயகா மாதி
 அவற்றின் நீங்குபு மழுவலான் அடியிணை சேர்வார்.   24
 |  |