ஆம்பல் நீள் மருப்பு ஆரம் உம்-யானையினது நீண்ட கொம்பிற் பிறந்த முத்தமும், மாசு அறு காம்பு மாண உகும் கதிர் முத்தம் உம்- குற்றமற்ற மூங்கில்கள் மாட்சிமைப் படச் சிந்திய கிரணங்களையுடைய முத்தமும், பூ பசுமை பொழில் நீடும் புரை இருள் ஒப்பு-பூக்களையுடைய பசிய சோலையின் கண் நீடிய பெரிய இருளை யோட்டி, முட்டாது பப்பு ஒளி மேவும்-குறைபாடில்லாமல் பரவிய ஒளியை வீசும். முத்தங்களினொளி சந்திர கிரணம் போலக் குறைபாடின்றி இருளை யோட்டு மென்பது கருத்து. செம்பொ னன்சுனை சேர்முகை நீலமா வம்பு நீடு மருங்களி யாரவிள் கொம்புப் பூமலி பொன்னவிர் குன்றத்தூர் பம்பு சேணதி பாமருட் டாருமே. 18 | செம்பொன் நன்மை சுனை சேர் முகை நீலம் மா வம்பு நீடு மருங்கு அளி-சிவந்த பொன்னாலாகிய நல்ல சுனையிற் பொருந்திய முகைத்த நீலோற்பலங்களின் பெருமை பொருந்திய வாசனை நீடிய பக்கங்களில் (சஞ்சரிக்கும்) வண்டுகள், ஆர விள் கொம்புப் பூ மலி பொன் அவிர் குன்றத்து ஊர் பம்புசேண் நதி-மிகவும் மலர்ந்த கோட்டுப் பூக்கள் நிறைந்த பொற் கட்டிகள் விளங்கா நின்ற அம்மலையின்கண் தவழாநின்ற நெருங்கிய ஆகாய கங்கையில், பா மருட்டு ஆரும்-பாய்ந்து ஆகாய கங்கையைச் சுனைநீரென்றே மயங்குதலைப் பொருந்தும். பா என்னும் முதனிலைத் தனி வினை வினையெச்சப் பொருளில் வந்தது. மருட்டு, தொழிற்பெயர். சுழி குளம் வஞ்சித் துறை மதிபகவே யான்ற தினைமனிமா வாவன் பமர் துறுசே வாயா கனிதுவன்று மாவே. 19 | ஒரு செய்யுள் எவ்வெட்டெழுத்தாக நான்கு வரி எழுதப்பட்டு, மேனின்று கீழிழிந்தும் கீழ் நின்று மேலேறியும் புறநின்று வந்து உள்முடிய அவ்வரி நான்குமேயாகி அச்செய்யுளே வருவது. மதி பகவேய் ஆன்ற தினை மனி-சந்திரனுடல் பிளவு பட (உயர்ந்த) மூங்கில்க ளமைந்த தினைப்புனத்திற் சென்று, மா ஆ அன்பு அமர் துறுசே ஆயா-பெரிய பசுக்களுடன் அன்பு பொருந்திய நெருங்கிய இடபங்கள் (அப்புனத்திலுள்ள தினைக் கதிர்களை மேய்ந்து) (உடல் வாடா, மா கனி துவன்றும்-(அம்மலையிலுள்ள) மாமரங்கள் (எப்போதும்) கனிகளால் நெருங்கி நிற்கும். மனி, னகரம் தொகுத்தல் விகாரம். |