|      என்னும் திருவார்த்தையை எமது பெருமான் திருமுன் நிற்கும் நந்தி    தேவர் வாயிலாக அறிவித்த பொழுது மாயவனும் அத்தேவரோடும் கூடி
 ஆலோசித்தனன்.
 மேற்படி வேறு	 		| உருகெழு நிலம்ஒரு வையமும் இருசுடர் இருபுடை ஆழியும்
 சுருதிகள் துகளறு வாசியும்
 மருமல ரணையவன் வலவனும்.                  22
 |       வடிவுடைய பூமி ஒப்பற்ற தேர்த்தட்டாகவும், சந்திர சூரியர் இரு    மருங்கும் உள்ள சக்கரங்களாகவும், வேதங்கள் குற்றமற்ற குதிரைகளாகவும்
 மணமுடைய மலர்த்தவிசினோனாகிய பிரமன் சாரதியாகவும்,
 		| தடநெடு வடவரை சாபமும் படவர விறைபகர் நாரியும்
 மடல்விரி துளவினன் வாளியும்
 கடவுளர் பிறர்பிற கருவியும்                   23
 |       பரப்பும் உயர்ச்சியும் உடைய மேருமலை வில்லாகவும், படமுடைய    பாப்பரசாகிய வாசுகி நாணாகவும், இதழ் விரிகின்ற துளவ மாலையையுடைய
 மால் அம்பாகவும், தேவர் பிறர் பிறகருவிகளாகவும்,
 		| ஆயினர் அதுபொழு தண்ணலும் ஏய்வுறும் இரதம தேறினான்
 மாயிரு நெடியவில் வாங்கினான்
 காய்கனல் உமிழ்கணை பூட்டினான்.           	24
 |       அமைந்தனர்; அப்பொழுது பெருமானாரும் பொருந்தும் தேரில்     ஏறினர்; மிகப்பெரிய நீண்ட வில்லை வளைத்தனர்; அழிக்கின்ற
 நெருப்புமிழும் அம்புகளைப் பூட்டினார்.
 		| எறுழ்வலி முழுவதும் எண்ணினான் கறுவுறு குறுநகை காட்டினான்
 முறுவலின் உயர்புரம் மும்மையும்
 நெறுநெறு நெறுவென நீறின.                  25
 |       தேவர்களுடைய பெருஞ்செருக்கை முற்றவும் திருவுள்ளத்தி    லெண்ணினர்; சினத்தொடு கூடிய புன்னகையைத் தோற்றுவித்தனர்;
 புன்சிரிப்பினால் உயர்ந்த நகரங்கள் மூன்றும் ‘நெறு நெறு நெறு’ எனும்
 ஒலிக்குறிப்புடன் நீறாயின.
      எறுழ்வலி-ஈண்டு இறுமாப்பு. அமரேசப் படலம் 6-ஆம் செய்யுளில்    வரும் திறலும் இப்பொருளுடையதே; தம்மால் இயல்வதாகத் தேவர்
 தத்தமுட் கருதினர்.
 |