| 		| மற்று யிர்க்குவே றாண்அலி பெண்ணென வழக்கஞ் சற்றும் இல்லைநீர்ச் சலதியுட் படுபல துரும்பின்
 பெற்றி போலும்இப் பூதத்தின் கூட்டமும் பிரிவும்
 கற்று ளோய்இவை இருமைக்கும் மாயைகா ரணமாம்.   12
 |       வேற்றுமை உடைய ஆண், பெண், அலி என்னும் வழக்கு உயிர்க்குச்    சிறிதும் இல்லை. நீர்க்கடலுட் படுகின்ற பல துரும்புகளின் தன்மை போலும்
 இவ்வைம் பெரும் பூதங்களின் சேர்க்கையும் பிரிவும், உணர்ந்தோய்! இவை
 கூடுதற்கும், பிரிதற்கும் மாயை முதற் காரணமாம்.
 		| செய்வி னைப்பயன் உள்ளது வருமெனத் தெளிதி எவ்வம் உற்றுழந் திரங்கலை மகிழ்ந்திரு என்னும்
 பௌவம் முற்றும்ஓர் உழுந்தள வாக்கிமுன் பருகுஞ்
 சைவ மாமுனி மொழிக்கெதிர் அரசனுஞ் சாற்றும்.     13
 |       ‘தாம் செய்த நல்வினை தீவினையின் பயனாகிய இன்பத்துன்பங்கள்     உள்ளவை வருமெனத் தெளிதி. துன்பம் எய்தி வருந்திப் புலம்பாதே;
 மகிழ்ச்சி கொள்’ என்று கூறிய அளவிலே, கடல் நீர் முழுவதையும் ஓர்
 உழுந் (உளுந்து) தளவாக்கி முன் பருகிய சைவத் தபோதனர் அறிவுரைக்கு
 எதிராக இராமபிரானும் சாற்றுவன்,
 		| அத்த நின்உரை முழுவதும் உண்மையே யானும் இத்த லைக்கிது இணங்குமோ மனையவள் மாற்றான்
 கைத்த லத்தகப் பட்டுழித் தத்துவங் காண்போன்
 பித்தன் என்றுல குரைத்திடும் ஆதலிற் பெரியோய்.    14
 |       ‘ஞானத் தந்தையே!  நின் திருவாக்கு முற்றும் உண்மையே ஆனாலும்,     இப்பொழுதிவ் வுபதேசம் பொருந்துமோ? என் வாழ்க்கைத் துணைவி
 பகைவனது கைவசப் பட்டுக் கலங்கும் எல்லையில் தத்துவம் பேசுவோனைப்
 பித்தன் என்றுலகம் பழிக்கும் ஆதலின், பெரியோனே!’
      பித்தன் (பேரன்பினன்) என்று புகழ்தலும் உண்டு; அறிவிழந்தவன்     என்றிகழும்.
 		| பறந்த லைப்புகுந் தொன்னலர்ச் செகுத்துயிர் பருகிச் சிறந்த சீதையை மீட்டபின் ஐயநீ தெரிக்கும்
 உறந்த தத்துவ ஞானத்துக் குரியவன் ஆவேன்
 அறைந்த வாறல தென்உளம் அடங்கிடா தென்றான்.    15
 |       ‘போர்க்களத்திற் புக்குப் பகைவரைப் பற்றி அவர் தம் உயிரைப்     பருகிக் கற்பிற் சிறந்த சீதையை மீட்ட பின்னர் ஐயனே!  நீ உணர்த்தும்
 நுணுகிய தத்துவ (உண்மை) ஞானத்திற்குப் பாத்திரனாவேன்; கூறிய வாறன்றி
 என்மனம் அமைதி பெறா’ தென்றனன்.
      தத்துவ நூல் நுணுகி நிற்றல்; ‘ஆய் இழை ஆய் ஆன்மா’ எனவும்,    வரும் அதனுரையையும் காண்க. (சிவஞா. 7-3-1)
 |