|      அகில உலகையும் ஓரிமைப் பொழுதில் ஒடுக்குவோன்; நிலைபெறும்    மேருவை வில்லாக உடையவன்; கொடிய கொலையைச்செய்கின்ற
 அம்பினையுடையவன்; ஒருவரோடு உவமிக்க வொண்ணாத அளவிட இயலாத
 ஆற்றலையுடையவன்; சிவபிரான் ஒருவனே அல்லாமல் இல்லை என்னக்
 கூறி முறையிடும் சொல்லற்கரிய வேதம்.
 		| தென்தி சைக்கிறை இராவணன் திருவடி விரலின் ஒன்ற னால்இறக் கண்டனன் ஒருசிறு துரும்பால்
 அன்று விண்ணவர் தருக்கொடு மிடலறச் செய்தான்
 வென்றி பூண்டுயர் கூருகிர் நகைவிழிப் படையான்.    20
 |       தென்திசையாகிய இலங்கைக்கு!  இறைவனாகிய இராவணனைத்     திருவடி விரல் ஒன்றன் நுதியினால் அழியச் செய்தனர்; ஒரு சிறு துரும்பை
 அளவு கோலாகக் கொண்டு முன்னாள் தேவர் தம் இறுமாப்பையும்
 வலிமையையும் முற்றக் கெடுத்தார். வெற்றிகொண் டுயர்ந்த கூரிய நகத்தையும்,
 புன்சிரிப்பினையும், கண்ணையும் படையாக உடைய பெருமானார்.
      பிரமன் சிரத்தினை நகத்தால் கொய்தவர் வயிரவர்; ஒற்றுமை பற்றிக்     கூறப்பட்டது. புன்சிரிப்பினால் முப்புரமும், நுதல் விழியினால் மன்மதனும்
 அழிந்தமையறிக. ‘‘திருவடி விரல் உகிர் விழிசி ரிப்பினால், மருவலர்க்
 கடந்தருள் மதுகை எம்பிரான்’’ (வாணேசப். 14).
 		| அனைய னாகிய தனிமுதல் பாற்சரண் அடைந்தோர் ஏனைய வேட்பினும் எண்மையின் எய்துவர் அதனாற்
 கனைகொள் பூந்தடம் உடுத்தஇக் காஞ்சிமா நகரிற்
 புனைம லர்க்குழல் பாகனை அருச்சனை புரிவாய்.    21
 |       அத்தன்மையனாகிய ஒப்பில்லாத முதல்வனைப் புகலடைந்தோர்     எப்பொருளை விரும்பினாலும் அப்பொருளை எளிமையின் அடைவர்.
 ஆகலின், ஒலிக்கின்ற பூக்களையுடைய பொய்கைகள் சூழ்ந்த இக்காஞ்சிமா
 நகரில் அலங்கரிக்கப் பெற்ற மலரை யணிந்த கூந்தலையுடைய அம்மை
 பாகனை அருச்சனை செய்வாய்.
 		| வீரம் வேண்டினை ஆதலின் விதியுளி வழாது வீர ராகவப் பெயரினால் விமலனை இருத்தி
 வீர னேதொழு தேத்துதி எனமுனி விளம்ப
 வீரர் வீரனும் அம்முறை பூசனை விளைப்பான்.     22
 |       ‘வீரனே!  வீரத்தைப் பெற விரும்பினை ஆதலின், வீரராகவேசப்    பெருமான் எனத் திருநாமமுடைய பெருமானைத் தாபித்துத் தொழுது
 துதிப்பாய்’ என அகத்தியர் அறிவுறுத்த வீரருள் தலைவனாக வைத்து
 எண்ணப்படுகிற இராகவனும் அவ்வாறே பூசனையைத் தொடங்குவான்.
 |