|      அவற்றினும், மக்கள் வகுத்த சிவபிரான் திருக்கோயில்கள் மிக்கன.    தேவர்கள் வழிபாடியற்றிய சிவாலயங்கள் முன்னவற்றினும் சிறப்பின. தானே
 தோன்றிய சிவலிங்கப்பிரான் கோயில் கொண்ட நகர்கள் தேவர் நியமித்த
 இடங்களிலும் சிறப்புடையன.
 		| சுயம்பு வைகுந் தலங்களுள் மிக்கவாம் வியந்தெ டுத்து விளம்பப் படும்அவை
 நயந்த அங்கவற் றுள்ளும்நற் காசிமிக்
 குயர்ந்த தன்னதிற் காஞ்சி உயர்ந்ததே.          	9
 |       தான் தோன்றீசப் பெருமான் தலங்களினும் மேம்படுவன ஆகும்     வியந்து எடுத்தோதப் படுவனவாகிய ஏழு நகரங்கள். விரும்பிய
 அத்தலங்களுள்ளும் நற்காசி மிக்குயர்ந்த நகரமாகும். அத்தலத்தினும்
 காஞ்சியே உயர்ந்தது.
      ஏழு நகர்: அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி,     துவாரகை என்பன.
 		| ஓது காஞ்சிக் குயர்ந்ததும் ஒப்பதும் பூத லத்திடை இல்லை புகலும்அம்
 மாத லத்தின் உகத்தின் வருத்தமும்
 பாத கப்பய னும்பட ராவரோ.                  10
 |       போற்றப் பெறும் காஞ்சி மாநகர்க்கு உயர்ந்ததும், ஒப்பதும் ஆகிய     தலம் புவியிடை இல்லை. பேசப்பெறும் அப்பெருந் தலத்தின்கண்
 வாழ்பவர்க்குக் கால வேறுபாடுகளினால் வரும் துன்பங்களும், பெரும்பாவப்
 பயன்களாகிய நரக முதலிய துன்பங்களும் வந்து வருத்தமாட்டா.
      அரோ, தேற்றப் பொருளது,	 		| பிறந்து ளோர்கள் வதியப் பெறுநர்அங் கிறந்து ளோர்உளத் தெண்ணுநர் யாவரும்
 அறந்த ழைக்கும்ஏ கம்பர் அருளினாற்
 சிறந்த முத்தி உறுவது தேற்றமே.                11
 |       ‘திருக்காஞ்சியில் பிறக்கும் பேற்றினையுடையவரும், அங்குறையும்    வாழ்வுடையோரும், இறப்போரும், அத்தலத்தினை உள்ளத்தில்
 நினைப்பவரும், ஆகியோர் யாவரும் அறத்தைத் தழைக்கச் செய்யும் ஏகம்பர்
 திருவருளினாற் றலையாய முத்தியை எய்துவது சத்தியமே?
 மேற்படி வேறு	 		| என்றறி வுறுத்திய இயல்பின் மாதவர் மன்றலம் பூங்கழல் வணங்கி யாதவன்
 அன்றவர் ஏவலிற் காஞ்சி அண்மிஅங்
 கொன்றிய வளனெலாம் உவந்து நோக்கினான்.     12
 |  |