| 		| உறப்புறும் எங்களுக் குதவும் உண்டியும் அறத்தொழில் பயிலிய மானர்க் கான்றவான்
 துறக்கமும் இல்லையாய் விட்ட துட்கென
 இறத்தலின் எச்சன்இவ் வுலகின் எம்பிரான்.       12
 |       எம்பெருமானே! வலிமை மிகுதற்குக் காரணமாக எங்களுக்குதவும்     உண்டியாகிய அவியும், அறச் செயலாகிய வேள்வியைச் செய்கின்ற
 இயமானர்க்கு அமைந்த தூயசுவர்க்கமும் இல்லையாயின. அச்சந்தோன்ற
 இவ்வுலகில் யாக வடிவினன் இறத்தலின்,
      விட்ட, அன்சாரியை தொக்கது. துட்கு-அச்சக் குறிப்பு.	 		| ஆதலின் எச்சனுக் களித்தி சென்னியென் றோதினன் வேண்டலும் உரைத்தல் மேயினான்
 மாதர்வெண் குழச்சிறு மதிக்கொ ழுந்தினைப்
 போதொடு மிலைச்சிய சடிலப் புங்கவன்.         13
 |       ஆதலின், திருமாலுக்குத் தலையை அளித்தருளாய் என்று    வேண்டினன்; வேண்டவும், அழகிய வெள்ளிய இளைய சிறிய
 மதிக்கொழுந்தினை மலரொடும் சூடிய சடையுடைப் பெருமானார் கூறத்
 தொடங்கினார்.
 		| எம்புடை வரம்பெறும் இரும ருத்துவ உம்பரின் அவன்தலை ஒன்றிக் கூடுக
 நம்பும்இவ் விருவரும் நந்தம் ஆணையால்
 பம்பிய வேள்வியில் பாகம் எய்துக.            	14
 |       ‘எம்மிடத்து வரம்பெறும் அசுவினி தேவர்களாகிய இருமருத்து வரால்     அம்மாலின் தலை இணைந்து கூடுக. விரும்பத் தகும் இத்தேவவயித்தியர்
 இருவரும் நம்முடைய ஆணையால் செறிந்த யாகங்களில் அவிப்பாகம்
 எய்துக.’
 		| என்றருள் மழுவலான் சரணம் ஏத்திமற் றொன்றிது வேண்டுவான் உடைய நாதனே
 மன்றநின் அருளினால் புற்றின் வாய்எழூஉத்
 தின்றுநா ணறச்செயுந் திறல்பெற் றேனரோ.     	15
 |       என்றருளும் மழுவலான் திருவடிகளைத் துதித்து மேலும் ஒன்றாகிய     இதனை வேண்டுவான்; ‘எங்களை அடிமையாக உடைய நாயகனே அறுதியாக
 நின்னுடைய அருளால் புற்றிடை எழுந்து நின்று நாணியை அறுக்கும்
 வலிமையைப் பெற்றேன்.’
 		| ஆதலின் வெவ்வினைத் தொடக்க றுக்கும்இம் மேதகு வரைப்புவன் மீக நாதம்என்
 றோதவும் கண்டவர் பிறவி ஓவவும்
 ஈதிநீ வரமென விடையின் ஏந்தலும்.            16
 |  |