|      ‘ஆதலின், கொடிய வினைத்தளையை அறுக்கும் இம் மேன்மை    பொருந்திய தலம் வன்மீக நாதம் என்று போற்றப்பெறவும், கண்டவர்
 பிறப்பொழியவும் நீவரம் ஈவாயாக’ என விடையூர் அண்ணலும்,
 		| தந்தனம் வரமெனச் சாற்றி நீங்கினான் இந்திரன் மீண்டனன் இரும ருத்துவத்
 தந்திரத் தலைவரால் எச்சன் றன்சிரம்
 முந்துபோற் பொருத்தலும் முளரிக் கண்ணினான்.   17
 |       ‘தந்தோம் வரம்’ எனத் திருவாய் மலர்ந்து மறைந்தனர். இந்திரனும்     திரும்பினான். இருமருத்துவராகிய ஆயுள் வேதத் தலைவரால் திருமால்
 தனது தலை முந்து போலப் பொருந்துதலும் பதுமாக்கனாகிய திருமால்,
 		| தெய்வத்தின் வலியினாற் சென்னி பெற்றெழூஉக் கொவ்வைச்செவ் வாய்உமை கூறன் தாள்தொழு
 தவ்வத்தன் ஆணையால் அவியின் பாகம்அங்
 குய்வித்தோர்க் கமைத்துத்தன் உலகம் புக்கனன்.    18
 |       இருதேவர் தம் வன்மையால் சிரம் பெற்றெழுந்து கொவ்வைக்     கனிபோலும் சிவந்த இதழ்களையுடைய உமையம்மை கூறனாகிய பிரான்
 திருவடிகளைத் தொழுது அத்தந்தையின் ஆணை வழி அங்குப்பிழைப்பித்த
 அவ்வைத்தியர்க்கு அவிப்பாகம் நியமித்துத் தனது வைகுந்த உலகிற்குச்
 சென்றனன்.
 		| இகழரு முகுந்தனே இந்த வாறிழி தகவுற இடும்பையில் தங்கு நீர்மையால்
 உலகருஞ் செல்வத்தை உடம்பை அல்லது
 புகழினை விரும்பலும் போதத் துன்பமே.         19
 |       போற்றற்குரிய திருமாலே இங்ஙனம் தலையிழக்கும் இழிந்த நிலையை    அடையத் துன்பத்தில் தங்கும் இயல்பினால் அழிதலில்லாத பெருஞ்
 செல்வத்தையோ, உடம்பையோ, அல்லது புகழினையோ விரும்புதலும்
 மிகவும் துன்பமாம்.
 வன்மீக நாதப் படலம் முற்றிற்று.	     ஆகத் திருவிருத்தம் - 1124.		 |