|      காணப்படும் இவ்வுலகம் யாரை முதலாக உடையது? நிலைபெற்ற     உலகம் எவனிடத்துத் தோன்றி ஒடுங்கும்? பல் உயிர்களின் ஆணவ மலத்தை
 நீக்கி அருள் செய்கின்ற தலைவன் யாவர்? இதனைச் சாற்றுக என்றனர்.
 		| ஐம்மு கத்தயன் அனைய காலையின் மம்மர் நெஞ்சினான் மயங்கிக் கூறுவான்
 இம்ம றைப்பொருள் யாரும் உய்வகை
 நும்ம னக்கொள நுவலக் கேண்மினோ.           5
 |       ஐந்து முகங்களையுடைய பிரமன் மயக்கம் கொண்ட மனத்தினால்     அறிவு மயங்கிக் கூறுவான்; ‘வேத நுண் பொருளாகிய இதனை யாவரும்
 அறிந்து பிழைக்கும்படி உங்களுடைய மனங்கொள்ளச் சொல்லுவன்; நீவிர்
 கேண்மின்.’
 		| ‘‘உலகி னுக்கியான் ஒருவ னேஇறை; உலகம் என்கணே உதித்தொ டுங்கிடும்;
 உலகெ லாம்எனை வழிபட் டும்பர்மேல்
 உலகி னைத்தலைப் படுங்கள் உண்மையே.       	6
 |       ‘யான் ஒருவனே உலகினுக்கு முதல்வன். உலகம் என்னிடத்தே    தோன்றி ஒடுங்கும், உலகம் யாவும் என்னையே வழிபாடு செய்து முத்தியை
 அடையும். இது சத்தியமே’.
      உம்பர் மேல் உலகம்; ‘வானோர்க் குயர்ந்த உலகம் புகும்’ (திருக், 346)    தேவர்க்கும் எட்டாத முத்திப்பேறென்க. கள்-அசை.
 வேதங்கள் உரைத்தல்	 கலிநிலைத் துறை	 		| என்றான் விரிஞ்சன் அதுகாலையில் வேத மெல்லாம் முன்றோன்றி அங்கண் மொழிகுற்றன முண்ட கத்தின்
 வென்றோய் புராணம் பலசாத்திரம் வேதம் மற்றும்
 குன்றான்ற வில்லான் றனையே முதல்என்று கூறும்.    7
 |       என்று கூறினன் பிரமன். அப்பொழுது வேதங்கள் எதிர்வந்து அவண்    மொழிய லுற்றன. தாமரை மலரில் இருப்பவனே! மேருமலையை அமைந்த
 வில்லாக உடைய சிவபிரானையே வேதங்களும், புராணங்களும்,
 பலசாத்திரங்களும், பிற நூல்களும் முதல்வன் என்று பேசும்.
 		| ‘‘அவனேமறு வற்ற பரம்பிர மம்பு ராணன் அவனேமுழு துந்தரு காரணம் ஆங்கெ வர்க்கும்
 அவனே இறைவன் தொழுவார்க்கருள் வீட ளிப்போன்
 அவனே’’ என ஓதிவெவ் வேறும் உரைப்ப அங்கண்.   8
 |  |