வயிரவேசப் படலம் 349


     ‘அவனே குற்றமற்ற பரப்பிரமம்; பழையோன் அவனே; எல்லா
வற்றையும் காரியப்படுத்துகிற காரணனும் ஆவன்; யாவர்க்கும் அவனே
இறைவன்; வழிபடுவார்க்கு அருள் வீட்டினை வழங்குவோனும் அவனே’
என உணர்த்தி வேறு வேறாகவும் அந்நிலையில் கூறின.

     புராணன்; முது முதல்வன்.

இருக்கு வேதங் கூறல்

‘‘எச்சன் றனக்கும் இமையோர்க்கும்எவ் வேதி யர்க்கும்
அச்சங் கரனே அரசன்விசு வாதி கன்சீர்
நச்சும்உனை ஈன்றருட் பார்வையின் நோக்கி நல்கும்
மெய்ச்சித்துரு என்றறி’’ என்ற திருக்கு வேதம்.        9

     ‘திருமாலுக்கும், தேவர்க்கும், எத்திறத்து வேதியர்க்கும் அச்சங்கரனே
அரசனாவன்; உலகினைக் கடந்து நிற்றலின் விசுவாதிகன் ஆவன்; படைப்பை
விரும்புகின்ற உன்னைப் படைத்துக் கருணை நோக்குதவி அதனை வழங்கும்
உண்மை அறிவுரு என்றறிதி’ என்றது இருக்கு வேதம்.

      ‘படைப்போற் படைக்கும் பழையோன்’ (திருவாசகம்).

எசுர் வேதங் கூறல்

‘‘தன்கூற்றில் வருங்கண நாதர் தடுக்க லாற்றாக்
கொன்கூர்சர பாதிய ரால்வயங் கூறும் விண்ணோர்
வன்காழ்வலி செற்றவன் யார்அவ னேம திக்கு
நன்காரணம்’’ என்று நவின்ற தடுத்த வேதம்.      10

     தன் வடிவினின்றும் தோன்றிய கணநாதர்கள் தடுக்கலாகாத அச்சம்
மிகுதற்குக் காரணமாகிய சார்த்தூலர் ஆதியரால் வெற்றிச் செருக்குறும்
தேவர்களின் மிகு வயிர வன்மையை அழித்தவன் யார்? அவனே
மதிக்கத்தகும் உண்மைக் காரணனாவன் என்று கூறியது அடுத்தெண்ணப்படும்
எசுர்வேதம்.

சாம வேதங் கூறல்

தோலாஅவை நாப்பண் அடைந்து துரும்பு நட்டு
மாலாதி விண்ணோர் வலிமுற்றவும் மாற்ற வல்லோன்
ஆலாலம் உண்டோன் அவனேஅகி லங்களுக்கு
மேலாய ஏது’’ எனவிண்டது சாம வேதம்.         11

     ‘அசுரரை வெற்றி கொண்ட தேவர் சபை நடுவில் வந்து துரும்பினை
நாட்டித் திருமாலாதி தேவர் வலி முழுதையும் போக்க வல்லோனும், விட
முண்டு கண்டத் தடக்கினோனும் ஆகிய அவனே அனைத்துலகங்களுக்கும்
மேலாய காரணன்’ என விளம்பிற்று சாம வேதம்.