பிறர் பேதைமை பொருளாக நகை பிறந்தது; நோதகல்; ‘நோநொந்து’    
    (திருக். 157.) விசேடவுரையைக் காண்க.	ததீசி முனிவர் மறுமொழி கூறல்
			| எச்சத்தால் எச்சம் என்னும் மறைப்பொருள் இதுவோ கூறீர் எச்சத்தின் வேறாம் ஏனைக் கருமங்கட் கெச்சம் போல
 எச்சத்திற் குயர்ந்தோன் வெள்ளை ஏற்றினான் எனுங்க ருத்தால்
 எச்சச்சொல் லதனான் முக்கட் பகவனை இயம்பும் அங்கண்.  17
 | 
		
	     ‘எச்சத்தால் எச்சம் என்னும் வேத வாக்கியப் பொருள் இதுவோ     
    கூறுமின். வேள்வியின் வேறாகும் பிற நற்செயல்களுக்கு வேள்வி சிறந்தது 
    போல எச்சத்திற்குத் தலைவர் சிவபிரான் என்னும் தாற்பரியத்தினால் எச்சம் 
    என்னும் சொல்லால் முக்கட்பகவனை அவ்வேதம் கூறும்.	
    		| ஆதலின் எச்சந் தன்னால் அணங்கொரு பாகன் றன்னை மாதவன் முதலாம் விண்ணோர் வணங்கினர் வழிபட் டுய்யப்
 போதுவர் என்ப தன்றே அம்மறைப் பொருளாம் அன்றி
 ஏதமில் எச்சந் தன்னால் தனைத்தொழும் என்ப தாமோ.   18
 | 
		
	     ‘ஆகலின் வேள்வியால் உமையொரு கூறனைத் திருமால் முதலாந்    
    தேவர் வணங்கி வழிபாடு செய்து தப்பிப் பிழைக்க முயல்வர் என்பதன்றோ 
    அவ்வேதத்தின் கருத்தாம் அல்லாமல் குற்றமற்ற வேள்வி தன்னையே 
    தொழும் என்று பொருள் காணுதல் தகுமோ?’	
     வேள்வி வடிவினன் திருமால்; வேள்விக்கு நாயகன் சிவபெருமான்.    
    ‘எச்சமேசுரும் புளர்துழாய் அலங்கலான் என்ப., எச்ச நாயகன் பொலந்துணர் 
    இதழிமா லிகையான்’ (சார்ந்தா. 25)	
    		| சகந்தனில் எவருந் தம்மின் உயர்ந்தவர் தமைப்பூ சிப்பர் உகந்தவர்க் கன்றித் தம்மோ டொத்தவர் இழிந்தோர் தம்மை
 அகந்தெறப் பூசை செய்வார் ஆருளார் விதியும் அற்றே
 மகந்தனக் கரசன் முக்கண் வள்ளலே என்னும் வேதம்.    19
 | 
		
	     ‘உலகில் எவருமே தம்மின் மிக்கோரையே பூசனை புரிவர்; உயர்ந்த    
    வரை அன்றித் தம்மோடொத்தவரையும் தம்மின் இழிந்தவரையும் பாவம் 
    அழியப் பூசை செய்வோர் ஒருவரும் இலர். நூல் வழக்கும் அதுவே யாகும். 
    முக்கண் வள்ளலே வேள்விக்கு நாயகன் என்று வேதங்கூறும்.	
     ‘உகப்பே உயர்தல்’ (தொல். உரி. 9) ஆதலின் உயர்ந்தவர் என்க.