| அறுசீரடி யாசிரிய விருத்தம்	 		| உணங்கரும் வலத்த ஆழி உணங்கிய தோர்ந்து மாற்றார்க் கணங்குசூழ் கணங்கள் அண்டம் வெடிபட முழங்கி ஆர்த்துத்
 துணங்கையாட் டயரும் ஓதை துஞ்சினார் ஒழிய நின்ற
 கணங்கெழு சுரர்கள் கேளாக் கலங்கிஓட் டெடுக்கும் ஏல்வை.  43
 |       கெடலரிய வெற்றியையுடைய ஆழி கெட்டதறிந்து பகைவர்க்குத்    துன்பத்தைச் செய்கின்ற கணங்கள் அண்டமுகடு பிளவு படப் பேரொலி
 செய்து ஆரவாரித்துக் கூத்தியற்றும் ஓசையை இறந்தோர் ஒழிய எஞ்சி
 யிருந்த தேவர் குழாம் செவி ஏற்றுக் கலங்கிப் புறங்கொடுத்தோடும் பொழுது,
 		| காண்டகு வீரச் செம்மல் கணங்களான் வளைத்துத் தாளின் மாண்டகு நிகள யாப்பு வலித்தலும் புரவி மான்தேர்
 தூண்டிய எகினப் பாகன் துணையடி தொழுதி ரந்து
 வேண்டினன் அடிகேள் சீற்றம் விடுத்தருள் இனிஎன் றேத்தி.   44
 |       மதிக்கத்தக்க வீரபத்திரர் கணங்களைக் கொண்டு அகப்படுத்துக்    கால்களில் வலிமை அமைந்த விலங்குத் தலையை இறுக்குதலும் சாரதியாய்
 நின்ற அன்னத்தை வாகனமாகவுடைய பிரமன் திருவடிகளில் வணங்கித்
 துதித்து ‘அடிகேள்! வெகுளியை விடுத்து அருள் செய்மின்’
 எனக்குறையிரந்தனன்.
 பெருமான் எழுந்தருளுதல்	 		| மாதர்வெண் கமலத் தோன்றல் விண்ணப்பஞ் செவிம டுத்து மேதகைக் கணங்க ளோடும் வெகுளியை விடுத்து நம்மான்
 பாததா மரைக்கீழ்ச் சிந்தை பதித்தனன் பதித்த லோடும்
 பூதர மகளுந் தானும் ஆயிடைப் போந்தான் அண்ணல்.     45
 |       அழகிய வெண்டாமரை மலருறை பிரமன் வேண்டுகோளைத் திருச்    செவி சாத்தி மேன்மை பொருந்திய கணங்களுடன் வெகுளியைத் தவிர்த்துச்
 சிவபிரான் திருவடி மலர்களில் சிந்தையை வைத்த அளவில் மலையரையன்
 மகளாருடன் பெருமானார் அங்கெழுந்தருளினர்.
      பிரமன் வெண்டாமரை மலரிலிருத்தல்; ‘சாம வெண்டாமரை    மேலயனும்’ (திருஞா. திருவக்கரை.) ‘‘வெண்மலரான் பாற்கடலான்’’ (திருவா.
 திருத்தசாங்கம்)
 		| குடமுழா பதலை தக்கை கொக்கரை பணவம் கோதை படகம்ஆ குளித டாரி தகுணிச்சம் பம்பை மொந்தை
 துடிபணை திமிலை கண்டை தொண்டகம் பேரி கல்ல
 வடமுதல் இயங்கள் எல்லாம் வயின்தொறும் இயம்பி மல்க.   46
 |  |