|      குடமுழவை இருகரங்களாலும் அதிரத் தாக்குதோறும் செறிபெருங் கருணை வெளிப்பட்டிறைவனார் ஆயிரம் நீண்ட பெரிய கரங்களை     அவனுக்கு நல்கி ‘தானவவிடலையே! நீ விரும்பிய பொருளைக் கூறுக’
 என்றருளலும்,
      விடலை: 16-பிராயத்திற்கு மேல் 30-ஆம் பிராயம் வரையிற் கூறப்படும்     ஆண்பாற் பருவப் பெயர்; (பன்னிருபாட்டியல் - 232.)
 		| ஆயிர முளரிநீண் டலர்ந்த நீனிற மாயிருங் குன்றுறழ் வாணன் தாழ்ந்தெழூஉத்
 தீயழற் புரிசையும் திறலும் ஆக்கமும்
 பாயமூ வுலகமும் பரிக்குங் கொற்றமும்.          	        5
 |       ஆயிரம் தாமரை மலர்கள் கொண்ட நீல நிறமுடைய மலையை    ஒத்த வாணாசுரன் பெருமானைப் பணிந்தெழுந்து பகைவரைச் சுடுகின்ற
 நெருப்புமயமான மதிலும், வலிமையும், செல்வமும், பரந்த மூவுலகங்களையும்
 தாங்குகின்ற வெற்றியும்,
 		| ஓவரு நிலைமையும் உன்ன டித்துணை மேவரு பத்தியும் வேண்டி னேன்ஒரு
 மாவடி முளைத்தெழு வள்ள லேஎனக்
 காவணி உடுத்தொளிர் கம்ப வாணனும்.           6
 |       ‘என்றும் நீங்காத இயல்பும், உன் திருவடிகளிற் பொருந்திய பேரன்பும்,    வேண்டினேன், ஒற்றைமாமரத்தின் மூலத்தில் தோன்றிய வள்ளலே!’ என்று
 வேண்ட சோலைசூழ்ந் தழகு செய்யும் திருவேகம்பப் பெருமானாரும்,
 		| அனையவை முழுவதும் அளித்து நீங்கினான் புனைபுகழ் அசுரர்கோன் புவனம் யாவையும்
 தனதடிப் படுத்தினன் தருக்கி வாழுநாள்
 முனைவனைத் தொழூதெழக் கயிலை முன்னினான்.  	    7
 |       வேண்டிய வரங்கள் முழுவதும் வழங்கி நீங்கினார். புகழ்பூண்ட அசுரர்     தலைவனும் புவனங்கள் எல்லாவற்றையும் தன் ஏவலுட்படுத்துச் செருக்கிச்
 செல்வக் களிப்பில் வாழுங்காலத்தில், எல்லாப் பொருட்கும் முன்னோனைத்
 தொழுதலான் உயரக் கயிலையை அடைந்தான்.
 		| நம்மைஆ ளுடையவன் நடன வேலையிற் செம்மல்ஆ யிரமணிக் கடகச் செங்கையால்
 தொம்மெனக் குடமுழா எழுப்பச் சூர்த்தகண்
 கொம்மைவெள் விடையினான் கருணை கூர்ந்தரோ. 	     8
 |       நம்மை அடிமையாக உடைய பெருமான் திருக்கூத்தியற்றுகையில் அவுணர் தலைவன் கடகமணிந்த ஆயிரங் கைகளால் ‘தொம்மென’	 |