| 		| நின்னமர்க் குடைந்தபின் நினைஅ டக்குவான் துன்னுசீர் உபமனி யனுக்குத் தொண்டுபூண்
 டென்னருட் குரியனாய் எறுழ்ப படைத்தனன்
 அன்னவன் முன்னவ னாக எண்ணலை.           21
 |       ‘தோற்ற பின்னர் நின்செருக்கினை அடக்குதற் பொருட்டுச் செறிந்த    சிறப்புடைய உபமன்னிய முனிவர்பால் திருவடித் தீக்கையுற்று வழிபாட்டினால்
 எமதருளுக்குப் பாத்திரனாய் வன்மை எய்தினன். முன்னை நிலையில்
 வைத்தவனை எண்ணாதே.’
 		| என்னநாள் அவன்வரும் என்றி யேல்ஒரு நின்மகட் கோர்பழி நிகழ நின்நகர்
 நன்னெடுங் கொடியுள்ஒன் றொடியும் நாள்வரும்
 என்னலும் அசுரர்கோன் இருக்கை எய்தினான்.   	        22
 |       ‘அவன் வருநாள் என்றென வினவுதியேல், ஒப்பற்ற நின்மகட்கோர்     பழிவந்து சூழ நின்நகரத்துக் கொடி ஒன்றொடிந்து வீழுநாள் வருவன்’ என்ற
 அளவிலே அவுணர் கோமான் தன் மனைக்கண் புகுந்தனன்.
 உஷையின் களவொழுக்கம்	 		| அங்கொரு நாள்அவன் பயந்த ஆயிழை கங்குலிற் கனவினிற் கண்ணன் சேய்பெறும்
 பொங்கெழில் அனுருத்தன் புல்லப் புல்லினாள்
 வெங்களிப் பெய்தினள் விழிப்பக் கண்டிலாள்.    23
 |       ஓர்நாள் அவன் ஈன்ற அழகிய இழைகளையுடைய மகள் உஷை    இரவிடைக் கனவில் கண்ணனுக்கு மகனாராகிய பிரத்தியும்னன் பயந்த
 அழகுமிகு அநிருத்தன் தன்னைத் தழுவத் தானும் எதிர் தழுவினாள்;
 விரும்புகின்ற களிப்புற்றனள்; விழித்தவழிக் காணாளாய்,
 		| கையெறிந் தழுதுகண் கலுழ்ந்து சோர்ந்தனள் மெய்யணி சிதைந்துமெய் வெறுவி தாதல்கண்
 டைதெனத் தன்மலர் அனங்கன் சூட்டினான்
 தையல்தன் மருகியாச் சார்வ தோர்ந்தென.       24
 |       கையால் எற்றி அழுது கண் கலங்கித் தளர்ந்தனள், அணிகள்     நெகிழ்ந்து வீழ்ந்து உடம்பு வறிதாதல் கண்டு ‘அழகிது’ எனக் கூறி மன்மதன்
 அம்புகளாகிய மலர்களைத் தொடுத்தான் அவ்வழகி தன் மருமகளாதலை
 உணர்ந்தாற்போல,
 		| களங்கனிக் கூந்தலிற் கவற்றித் தற்றெறத் துளங்குறு பழம்பகைத் தொடர்பின் வேள்கரி
 விளங்கிழை முந்துதன் வீறு காட்டலால்
 இளங்கொடி முதல்அரிந் தென்னச் சாம்பினாள்.   	        25
 |  |