|      கீழ்வீழ்ந்து சோர்கின்ற பொற்கொடிக்குத் துணைபோல விண்ணில்    உராய்ந்து திரண்டுயர்ந்த கொடியும் சூறாவளி மோதமுரிந்து வீழ்ந்தது;
 வாணன் கொண்ட சிறந்த தவப்பயனும் உடன்வீழ்ந்தது; நாரத முனிவர்
 நிகழ்ந்ததை உணர்ந்தனர்.
 		| சிலைத்தொழில் மாண்ட தன்சேய் சிறுவனைக் காணா தெங்கும் இலைப்புரை கிளைத்து வாடுந் துவாரகைக் கிறைபால் எய்திப்
 புலப்படப் புகலக் கேட்டுப் பொருபடை எழுக என்னா
 உலப்புயத் துளவத் தாரான் ஒலிமுர சறைவித் தானால்.     34
 |       வில் வித்தையில் மாட்சிமைப்பட்ட மகன் மகனைக் காணாது யாண்டுந்    தேடி வருந்தும் கண்ணனை அடுத்துத் தெளிய உணர்த்தக் கேட்டுத் திரண்ட
 கல்லொக்கும் தோளிற் றுளவ மாலையன் ‘பொரற்குரிய படை எழுக’ என்று
 போர்ப்பறை அறைவித்தனன்.
      இலைப்புரை கிளைத்தல்: சிறிதும் இடம்விடாது தேடுதல்; ‘இலைப்புரை     தடவியே’ (கலிங். 461.) ‘இலைப்புரைக் கிளைத்திட்டோமே’ (சீவக. 1741)
 ‘இலைப்புரை கிளைத்து’ (தணிக. நார. 10.)
 		| வியவரின் உணர்ந்தார் சாற்றும் விசிமுர சோதை கேட்டுச் செயிர் அறத் தொகுவ அங்கண் சேனையே அல்ல மாறாச்
 சயமுடை இமையோர் தங்கள் சிதறுநல் வினைகள் தாமும்
 உயர்முர சோதை கேட்டவ் வும்பர்பால் தொகுவ மாதோ.  35
 |       ஏவலரால் உணர்ந்து முரசறைவோர் பறையறைந்துணர்த்தக் கேட்டுக்    குற்றமறத் தொகுவன இங்குப் படை; நீங்காத வெற்றியுடைய தேவர்
 தம்முடைய பரவிக் கிடந்த நல்வினைகளும் அவர்பால் திரள்வன.
 அசுரன் வீழ்வு சுரர் வாழ்வாகலின் இங்ஙனம் கூறினர். 		| கடுந்தொழில் அசுரர் தம்மால் தெறப்படுங் கால தூதர் கெடுந்தொழில் அனையார்ப் பற்றக் கிளர்ந்துவேற் றுருவு கொண்டு
 கொடுந் தொழில் முற்றக் கற்றா லனையகூர்ங் கோட்டு நால்வாய்
 அடுந்தொழில் தறுகண் வேழம் அளப்பில பண்ணி னார்கள்.    36
 |       கொலைத் தொழிலையுடைய அவுணரால் அழிக்கப்படும் யமதூதர்    கெடற்குரியவரைக் கைப்பற்ற எழுச்சியுற்று வேற்றுவடிவங் கொண்டு
 அக்கொலைத் தொழிலை முற்றவும் கற்றாலனைய கூரிய கொம்புகளையும்,
 தொங்குகின்ற வாயினையும், கொலையையும், வன்கண்மையையும், உடைய
 களிறுகள் எண்ணிலவற்றைப் போர்க் கோலம் செய்தனர்.
 		| குவைமணி மோலி விண்ணோர் மனமெலாங் குழுமி நம்மைக் கவலுற வருத்தி னாரை வெலற்கிது காலம் என்னா
 அவயவங் கொண்டு வெவ்வே றணைந்தென விரைசெல் காட்சி
 இவறுசீர்க் கலினப் பாய்மா எண்ணில பண்ணி னாரால்.      37
 |  |