|      கரமலர் மொட்டித்துக் கண்கள் நீர் பாய நின்று சிவந்த திருவடி    மலர்களைத் தொழுது கூறுவார்; ‘ஐயனே! மெய்யறிவைத் தந்தருளிப்
 பிழைக்குமாறுஏன்றுகோள். அஞ்சினோம் ஆகலின் அடைக்கலம்புக்கேம்.’
 		| இனைய தீர்த்தம் ஆடி எம்பெயர் புனைஇ லிங்கம் போற்றப் பெற்றவர்
 நினைவு முற்றும் நிரப்பி ஈண்டுநீ
 எனைய நாளும் இனிது வைகுவாய்.              8
 |       ‘இத்தீர்த்தத்தில் மூழ்கி எம்முடைய பெயரோடும் விளங்கும் ஓணேசப்    பிரான் காந்தேசப் பெருமான் எனப் பெறும் இவ்விலிங்கத்தில் நின்னைத்
 துதி செய்தோர் நினைவில் எழும் போகங்கள் முற்றவும் நிரப்பி இத்
 தலங்களில் நீ எந்நாளும் இனிது வீற்றிருப்பாய்,’
 		| என்று போற்றும் இருவர்க் கன்னவை மன்றல் ஒற்றை மாவின் நீழலான்
 நன்றும் அங்கண் நல்கி வைகினான்
 அன்று தொட்டஃ தற்பு தத்தலம்,                9
 |       என்று போற்றி வேண்டும் இருவர்க்கும் அவற்றை வழங்கி மணங்கமழ்     ஒற்றை மாமரத்தின் நீழலாராகிய திருவேகம்பநாதர் அவர்கள் விரும்பிய
 இவ்விடங்களிற் பெரிதும்  விளங்கி வைகினர். அந்நாள் முதலாக அத்தலம்
 வியப்பினதாகும்.
 திருஓணகாந்தன் தளிப் படலம் முற்றிற்று	     ஆகத் திருவிருத்தம்-1470	     சலந்தரேசப் படலம்	 கலி விருத்தம்	 		| ஓணனார்க் கரியவர் ஓணகாந் தன்தளி நீணகர் மேன்மையைத் தெரிந்தவர் நிகழ்த்தினாம்
 மாணமர் காட்சிசால் மற்றதன் வடதிசைப்
 பேணிய சலந்தரே சத்தியல் பேசுவாம்.            1
 |       திருவோண நாளுக்குரிய திருமாலுக்கரியவர் திருவோண காந்தராகிய    அசுரர்க்கன்பினால் எளியராய் வெளிப்பட்ட திருக்கோயில்களின்
 பெருமையைத் தெரிந்தவாறு நிகழ்த்தினோம். இனி, மாட்சியமர் காட்சி
 நிரம்பிய வடக்கில் உள்ள அத்தலத்தை விரும்பி வழிபாடுசெய்த
 சலந்தரேசத்தின் வரவைப் பேசுவோம்.
 |