| சலந்தரன் வெற்றி	 		| சலத்திடைத் தோன்றியோன் சலந்தரப் பெயரிய குலப்புகழ்த் தானவன் கோநகர்க் காஞ்சியில்
 நலச்சிவ லிங்கம்ஒன் றமைத்துநா ளுந்தொழு
 துலப்பரு மெய்த்தவம் உஞற்றினான் அவ்வுழி      2
 |       சலத்தில் தோன்றினமையால் சலந்தரன் எனப் பெயர் பெற்ற    மேன்மையுடைய புகழமைந்த அசுரன் தலைநகராகிய காஞ்சியில் நலமுடைய
 சிவலிங்கம் நிறுவி நாளும் வணங்கிக் கெடுதலில்லாத மெய்த்தவத்தைப்
 புரிந்தனன். புரியுங்காலை,
 		| காட்சிதந் தருளிய கண்ணகன் மாநிழல் ஆட்சியார்த் தொழுதெழுந் தாண்மையும் மதுகையும்
 மாட்சிசால் இறைமையும் மாற்றலர்த் தெறுதலும்
 மீட்சிஇன் றருளென வேண்டினான் பின்னரும்.     3
 |       திருக்காட்சி தந்தருளிய மாநீழலில் அரசுபுரி திருவேகம்பரைத்    தொழுதெழுந்து ‘வீரமும், வலிமையும், மாண்பு மிகு அரசுரிமையும், பகை
 வரை அழித்தலும் நீக்க மின்றி நிலைபெற அருள்செய்வாய்’ என இரந்தனன்.
 பின்னரும்,
 		| நின்னலால் என்னுயிர் நீப்பவர் இன்மையும் துன்னரு முத்திஇச் சூழலிற் பெறுவதும்
 பின்னல்வார் சடையினாய் அருளெனப் பெற்றுமீண்
 டன்னவா றுலகுதன் அடிப்படுத் தாளும்நாள்.      4
 |       ‘நின்னையன்றிப் பிறர் எவரும் என்னுயிரை நீக்குநர் இன்மையும்,    பெறற்கரிய முத்தியை இத்தலத்தே பெறுகையும் பின்னிக்கிடக்கின்ற நீண்ட
 சடையுடையாய்! இவ்வரங்களை அருளா’யென்று பெற்றுப்போய் அவ்வாறே
 உலகைத் தன்னடிக் கீழ்ப்படுத்தி ஆளு நாளையில்,
 		| இந்திரன் முதலிய எண்டிசைக் கிறைவரைக் கந்தமேன் மலர்மிசைக் கடவுளை வென்றுபின்
 பைந்துழாய்க் குரிசிலைப் பன்னகப் பகையொடும்
 வெந்திறல் நாகபா சத்தினால் வீக்கினான்.        5
 |       இந்திரன் முதலிய எண்டிசைத் தலைவரையும், பிரமனையும், வென்று    பின்னர்த் திருமாலைப் பாம்பிற்குப் பகையாகிய கருடனொடும் வெவ்வலி
 யுடைய நாகபாசத்தினால் பிணித்தான்.
 		| சிறையிடை மாட்டினன் சிற்சில நாட்செல அறைகழல் வானவர் வணங்கிநின் றவுணனைக்
 குறைஇரந் தனையனைக் கொண்டுமீண் டேகினார்
 பிறைஎயிற் றவுணனும் பெருமிதத் துறையும்நாள்.    6
 |  |