பரசிராமேச்சரப் படலம் 455


கொட்கு மனத்தை ஒருக்கிய கொள்கை
வட்குற ஐம்பொறி வாட்டும் இராமன்
கட்கமழ் கின்ற களிப்பின னாகித்
துட்கென நேர்வரு சோதியை நோக்கா.          10

     சுழல்கின்ற மனத்தை ஒரு வழிப்படுத்திய கொள்கையால் செயல்
அடங்க ஐம்பொறிகளையும் வருத்தும் இராமன் கள்ளின் நாற்றம் புறத்தே
வீசுகின்ற களிப்புடையனாய் அச்சந்தோன்ற வரும்பரஞ்சுடரை நோக்கி,

வாய்திற வாது மலர்க்கை அசைப்பின்
சேயிடை ஏகெனச் செப்பலும் முக்கண்
நாயகன் அண்மையின் நண்ணினன் போபோ
நீயென விள்ளவும் நீங்கல னாகி.               11

     வாயைத் திறவாது மலரை ஒக்கும் கையை அசைத்தலினால்
தொலைவிற் போ எனக் குறிப்பினாற் கூறலும் சிவபிரானார் பெரிதும்
நெருங்கினர். தூரத்தே ‘போ போ’ நீ, என்று வாய் விட்டுக் கூறவும்
நீங்கலனாகி,

மேற்படி வேறு

மாயனொடு நான்முகன் மனக்குநனி சேயோ
னாயஇறை சாலஅணி மைக்கண்உற லோடும்
தூயமுனி சீற்றமொடு சொல்லும்அற வாய்மை
போயபசு ஊன்நுகர் இழிந்தபுலை யாநீ.          12

     திருமால் பிரமர்தம் தவத்திற்கும் நெடுந்தொலைவினனாகிய பெருமான்
மிக்க அணிமையில் வருகாலை புனித முனிவனாகிய பரசிராமன் கோபத்தோடு
கூறுவான்; ‘மெய்யறத்தைக் கைவிட்டுப் பசுவினது இறைச்சியை நுகரும்
இழிந்த புலையனே! நீ,’

தருக்குறுவ தென்னைஇது தண்டமது செய்வார்
ஒருத்தர்இவண் இல்லைஎன உன்னினைகொல் என்றான்
மருத்துணர் நெடுஞ்சடை மறைத்துவரு பெம்மான்
அருத்தமறை நாய்கள்தமை ஏயினன் அவன்பால்.  13

     இறுமாப்புறுவதிஃது எவன். ‘தண்டம் செய்வோர் ஒருவரும் இங்கில்லை
என்றுட் கொண்டனை போலும்’ என்றனன். மணமுடைய பூங்கொத்துக்கள்
மருவிய நீண்ட சடையினை மறைத்து வரு பெருமானார் பொருளமைந்த
வேதங்களாகிய நாய்களை இராமன் மேல் ஏவினர்.

கொற்றவடி வேற்கடவுள் கோள்இப முகத்தோன்
உற்றெழு வெகுட்சியரின் ஓடிஇரு கையும்
பற்றினர்கள் நாய்புடை வளைப்பஇரு பாலர்
வெற்றியுறு கைப்படு விழுத்தவனை நோக்கி.      14