பரசிராமேச்சரப் படலம் 459


     ஓர் கரத்தால் பற்றிக் கொள்ளுதலும் உடையவன் தீண்டப்
பெற்றமையால் மயிர்க்கூச் செறிதலால் பெரிதும் உள்ளம் மகிழ்ந்தனன்.
இச்சிறப் புண்டாகியும் இழிசனனால் தீண்டப்படும் பெருங்கவலையைமனங்
கொண்டு முற்றவும் கொடுந் துன்பத்தில் மூழ்கிச் சினங்கொண்டனனாய்
மொழிதலுற்றான்.

மறிகடல் வரைப்பின் யாங்க ணாயினும் மறையோன் றன்னைப்
பொறிஇலி இழிந்த வாழ்க்கைப் புலைமகன் வெருவ ராமே
செறிஅழுக் கடைந்த கையால் தீண்டுமே அவ்வச் சாதி
பிறிவினிற் பிறழா வண்ணம் பிஞ்ஞகன் நடாத்துங் காலை   27

     ‘அவரவர் வருணப் பிறிவொழுக்கத்தில் திரிபின்றிச் செல்லச்
சிவபிரானார் ஆணை செலுத்துங்காலை, மறித்து வீசுகின்ற அலைகடல்
சூழ்ந்த அவனியில் எங்காயினும் அறிவிலியாகிய இழிந்த வாழ்க்கையை
யுடைய புலையோன் பயப்படாமே செறிந்த அழுக்குடைய கையால்
வேதியனைத் தீண்டுவனோ?’

இன்னினி உனது சென்னி இறுவது தேற்றங் காண்டி
புன்னெறிக்குலத்தோய் என்னப் புகன்றுதன் உளத்தேவெம்பிப்
பன்னரும் புலையன் றன்பால் பட்டுளேன் அந்தோ சீசீ
என்னுடைத் தவமும் யானும் அழிந்தவா றெனப்பு ழுங்க.  28

     ‘இழிந்த ஒழுக்கமுடைய குலத்தவனே! இப்பொழுதே உன் தலை
குறைபடுவதனை நிச்சயமாகக் கண்டுகொள்? என்று கூறிக் கோபித்துப்
‘பேசவும் தகாத புலையன் வயப்பட்டேன். அந்தோ! சீ சீ! யானும், என்
தவமும் அழிந்த வகை என்னே!’ என்றுள்ளங் கொண்டு வெதும்ப,

விழிபயில் நுதலும் முந்நீர் விடம்பொதி மிடறுங் கூர்வாய்
மழுமறிக் கரமுஞ் செங்கேழ் வடிவமும் கரந்து சாலக்
கழிபுலை வேடந் தாங்கி யெழுந்தருள் கருணைத் தோன்றல்
இழிவறும் இராமன் கூற்றுச் செவிமடுத் தினைய சொல்வான்.   29

     நுதற் கண்ணும், கடல் விடத்தைப் பொதிந்த கண்டமும், திருக்கரத்து
மழுவும், மானும், சிவந்த திருமேனியும் ஆகிய இவற்றை மறைத்து மிக
இழிந்த புலை வடிவங் கொண்டெழுந்தருள் கருணைப் பெருமான் இழிவு
நீங்கும் இராமனது மொழியைத் திருச்செவி ஏற்றிதனை அருளுவார்.

வடுவறு மறைவ லாளர் மரபினை யெனில்யான் தீண்டப்
படுகுவை யல்லைநீதான் பார்ப்பனக் கடைய னாவை
அடுதொழிற் புலையன் யான்அவ் வொழுக்கினிற் சிறந்த வாற்றால்
இடுகிடைத் தாயைக் கொன்றோய் என்னினுங் கடையன் நீகாண். 30

     ‘மறைவழி நின்றொழுகுவோர் மரபினில் வந்த குற்றமற்ற தூயை நீ
எனில் என்னால் தீண்டப்படமாட்டாய், பார்ப்பனருட் டோன்றிய கரும