| இரேணுகேச்சரப் படலம்	 கலி விருத்தம்	 		| கொங்கவிழ் நறுமலர்க் கொன்றை வேணியன் தங்கிய பரசிரா மேசஞ் சாற்றினாம்
 அங்கதன் தென்புடை அலைந திக்கரை
 பொங்கர்சூழ் இரேணுகேச் சரத்தைப் போற்றுவாம்.    1
 |       தேனுடன் மணம் உயிர்க்கும் நறிய கொன்றை மலர் மாலையை    அணிந்த சடையினையுடைய பெருமானார் எழுந்தருளியுள்ள பரசிராமேச
 வரலாற்றினைக் கூறினோம். இனி அத்தலத்திற்குத் தெற்கே பாலியாற்றின்
 கரையில் சோலை சூழ்ந்த இரேணு கேச்சரத்தைப் போற்றிக் கூறுவோம்.
 இரேணுகை மனங்கலங்கல்	 		| கரேணுக திப்பரை கணவன் அன்பர்பா தரேணுக வசம்உடல் தாங்கி நேர்ந்தமன்
 னரேணுக வெல்பர சிராமன் நம்புதாய்
 இரேணுகை என்பவள் அழகின் எல்லையாள்.      2
 |       பெண்யானையின் நடையினை ஒக்கும் நடையினையுடைய    உமையம்மையார்க்குக் கணவர்தம் மெய் யன்பருடைய திருவடித் துகளைக்
 கவசமாக மெய்யிற்றாங்கி எதிர்ந்த மன்னவர் வலி அழிய வென்ற பரசிராமன்
 விரும்புகின்ற அவனுக்குத் தாயாகிய இரேணுகை எனப்படுவாள் அழகின்
 வரையறையில் நின்றவள்.
 		| விச்சைதேர் பெற்றிய வரும வேந்தனார் மெச்சிய வரத்தினில் தோன்றும் மெல்லியல்
 அச்சம தக்கினி மனைவி யாயினாள்
 பொச்சமில் கற்பினிற் பொலியும் மேன்மையாள்.     3
 |       கல்வியை ஆராய்ந்துணரும் இயல்பினையுடைய வருமவேந்தனார்    போற்றிய வரத்தின் பயனாக வந்த மெல்லிய இயல்பினையுடையாள்
 சமதக்கினி முனிவர்க்கு வாழ்க்கைத் துணைவியாய் மெய்க்கற்பினின்
 விளங்கும் மேன்மையள் ஆயினள்.
 		| மனைஅறக் கிழமையின் ஒழுகு மாணிழை நனைமலர்க் குழலிஓர் ஞான்று பொய்கையில்
 கனைதிரைத் தடம்புனல் கவரப் போந்துழி
 வினைவழிக் கண்டனன் காத்த வீரியன்.           4
 |  |