|      ‘‘என்னுடைய ஏவல் வழி நிற்பாயாயின், இவளுடைய தலையை வெட்டி    எறிதி. விரைந்து செய்க’’ என்று கூறத் தன்னுடைய குருவின் திருவாக்கைச்
 சிரமேற்கொண்டு தாயை உடன்கொண்டு தவச்சாலைக்குப் புறம்பே வந்தனன்.
 		| அல்லலே பெண்ணெனப் பிறத்தல் ஆங்கதின் அல்லலே இளமையிற் சிறத்தல் ஆங்கதின்
 அல்லலே கட்டழ குடைமை ஆங்கதின்
 அல்லலே இரவலர் சார்பின் ஆகுதல்.           12
 |       பெண் பிறப்புப் பெருந்துன்பத்திற்குக் காரணம் ஆம்; அதனின் மிக்கது     நல்லிளமை; அதனின் மிக்கது பேரழகுடைமை; அதனின் மிக்கது வறியவர்க்கு
 உரிய பொருளாதல்.
      துன்பங்களுக் கேதுவாவனவற்றைத் துன்பங்களென்றுபசரித்தார்.	 		| அரங்குறை படுத்தவாள் அங்கை ஏந்திநல் உரங்குறை படுத்திடா உறுவன் அன்னைதன்
 சிரங்குறை படுத்துமீண் டெய்தித் தேசிகன்
 வரங்குறை படுத்திட அடிவ ணங்கலும்.           13
 |       நல்லறிவு நிரம்பிய முனிவனாகிய பரசிராமன் அரத்தினாற் கூரிதாக்கிய    வாளை அகங்கையிற் கொண்டு தாயின் தலையைக் கொய்து மீண்டு வந்து
 தேசிகனுடைய  மேன்மை  பொருந்தி  திருவடிகளை  வணங்கிய அளவிலே,
 வேண்டிய வரம் எனினும் ஆம்.
 		| துன்பமுற் றருந்தவன் இரங்கிச் சொல்லுவான் வன்பெரு மன்னவன் மகட்கு மைந்தன்நீ
 என்பதும் என்னிடத் தன்பும் இன்றியான்
 நின்புடைக் கண்டனன் அறிவின் நீடியோய்.      14
 |       சமதக்கினி முனிவர் வருத்தம் மிக்கு அறிவின் மிக்கோனே! நீ    பெருவலியுடைய வரும் வேந்தன் மகளாகிய இரேணுகை மகன் என்பதனையும்
 என்னிடத் தன்புடைமையையும் யான் நின்னிடத்து ஒருங்கு கண்டேன்.
      கொலைக்கு அஞ்சாமையால் அரச தருமமும், தந்தை சொற்     கடவாமையால் அன்பும் கண்டனன் என்றனர்.
 		| என்னுரை நிறுவினை யேனுந் தாய்கொலை நன்மையன் றுலகமும் பழிந விற்றும்என்
 றன்னுரைப் படிஅவண் ஏகித் தாழ்குழல்
 சென்னியைப் பொருந்துறச் சேர்த்தெ ழுப்பியே.   	               15
 |       என்னுடைய கட்டளையை நிறைவு செய்தனை, ஆயினும், தாயைக்    கொலை செய்தல் அறமன்று. உலகோரும் என்றும் பழிப்பர். இப்பொழுதும்
 என்னுடைய மொழிவழியே ஆங்குச் சென்று தாழ்ந்த கூந்தலாள் தலையைப்
 பொருந்தும்படி சேர்த்தெழுப்பியே.
 |