| 		மேற்கொள் சமணரால் கல்லுடன் பிணித்து கடலில் அமிழ்த்தப் பெற்றும் எங்கள் திருநாவுக்கரசர் பெருமானார் அஞ்செழுத்தின் துணையால்
 மேலெழுந்து விளங்குதலை ஒக்கும்.
      குளிர்-தங்கிய. கார் அமணர்-இருண்ட அறிவினையுடையவர். முருடு-    வன்மை. ‘வன்பராய் முருடு ஒக்கும் என் சிந்தை’ (திருவா) இருப்பை முதலிய
 மரங்களில் காணப்பெறும் முடிச்சு. இங்குத் திருநாவுக்கரசர் தம் கருணை
 வடிவம் கண்டும் தீங்கிழைக்கும் திண்மை.
     யானைக் கூடம்	 கலி விருத்தம்	 		| முறைமுறை பனைக்கைநீர் முகந்து வாய்மடூஉ நிறைதடங் குறைதட மாக்கு நீண்டவெண்
 பிறைமருப் பொருத்தல்மா மதப்பெ ருக்கினால்
 குறைதடம் நிறைதட மாக்குங் கொள்கைத்தே.      11
 |       களிறு, பனையை ஒத்த துதிக்கையால் நீரைப் பருகி நிறைந்த நீர்     நிலையைக் குறைபடுத்தும்; இனி, மதநீர் பெருக்கிக் குறைந்த நீர் நிலையை
 நிறைபடுத்தும். இவ்வாறு மாறி மாறி நிறைந்தும், குறைந்தும் காணப்பெறும்
 கோட்பாட்டினை உடைத்து அத்தடம்.
      ஒருத்தல்-யானைத் தலைவன் (கலி-46: 3, நச்) குறை தடம், நிறை தடம்     என்பன, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது.
 		| தாம்உறை இடந்தரி யலர்கட் கீந்தவர் தாம்உறை இடங்களில் தங்கி ளைக்குலந்
 தாம்உறப் பரிவருத் தனைசெய் வேழங்கள்
 தாம்முறை முறைதிரி தண்டம் எண்ணில.       	12
 |       யானைக் குலத் தலைவர்கள் தம் குழாத் தொடும் தங்குகின்ற    காட்டினைத் தம் அரசனது பகைவர்க்காக்கி, அவர் அரசு செய்கின்ற
 நாட்டிடத்தைத் தாம் சுற்றத்தொடும் கைக்கொண்டு இங்ஙனம் மாற்றிக்
 கொண்டு மாறி, மாறித் திரிகின்ற யானை செல்லும் வழிகள் அளவில்லன
 உள்ளன.
      தண்டம்-யானை செல்வழிகள். பரிவருத்தனை-மாற்றிக் கொள்ளல்.	 		| மழைப்புனல் தங்கள்மேல் ஊற்று மாமுகில் உழைச்செல வெகுண்டெதிர் இறைப்ப தொப்பநீள்
 புழைக்கையில் நிறையநீர் முகந்து போர்மதத்
 தழைச்செவிக் கரிகள்விண் தலத்து வீசுவ.        13
 |       போர்த் தொழிலையும், மதப்பெருக்கமைந்த காதுகளையும் உடைய    யானைகள் தம்மேல் நீரைச் சொரிகின்ற கரிய மேகங்களிடத்துப் பகை
 கொண்டு எதிர்செல உட்டுளை பொருந்திய துதிக்கையால் நிரம்ப நீரை
 முகந்து விண்ணிடத்து வீசா நின்றன.
 |