|      ஏனையபுல்லும், மரமும் முதலிய பூதகாரியப் பொருள்களாகிய உடம்பின்     வகைகளையும் திருமேனியில் உள்ள உரோமங்களிடமாகத் தோற்றுவித்துக்
 கத்தூரி தோய்ந்த பொலிவுள்ள கூந்தலையுடைய அம்மையார் மாமரத்தின்
 நீழலில் எழுந்தருளியுள்ள தூயகங்கை தங்கிய சடைமுடி வள்ளலை
 மெய்யன்பொடுந் தொழுதனர்.
 		| தொழுத நங்கையைத் தூமடித் தலமிசைக் கொண்டு முழுது மாகிய முன்னவன் மாந்தரு நிழற்கீழ்
 விழும ணித்தவி சும்பரின் விளங்கிவீற் றிருந்தான்
 கழுமல்நீங்கிஎவ் வுயிர்களுங் களிப்பொடு வளர்ந்த.	16
 |       வணங்கிய அம்மையைத் தூய மடித்தலத்தில் இருத்திக் கொண்டு     எல்லாப்பொருள்களுமாகிய உலகத்திற்கு முன்னுள்ளோர் மாமரத்தின்
 நீழலில் சிறந்த மணி ஆசனத்தின்மேல் விளங்கி வீற்றிருந்தனர். இவர்
 இங்ஙனமாகலின், எல்லாவுயிர்களும் துன்பம் நீங்கி மகிழ்ச்சியொடும்
 வளர்ந்தன.
 மூவர் வரம்பெறல்	 		| அந்த ணாளன்முன் மூவரும் இலளிதை யவள்பால் வந்த மாத்திரை யேதுயின் றெழுந்தவர் மான
 முந்தை வாலறி வெய்தினார் முதல்விதன் பதமும்
 எந்தை பாதமுந் தொழுதெழுந் திறைஞ்சிஏத் தெடுப்பார்.  17
 |       பிரமன் முதலாகிய கடவுளர் மூவரும் இலளிதாதேவியினிடத்துத்    தோற்றிய அந்நிலையே உறங்கி விழித்தவரை ஒப்ப வேள்வியில் அவியாக
 இடு முன்னர் விளங்கிய தூய அறிவினைஉடையராய் அம்மை அப்பர்
 திருவடிகளை வணங்கித் துதிசெய்தனர்.
 அறுசீரடி யாசிரிய விருத்தம்	 		| தரங்கவெண் புணரி கான்ற தழல்விடம் பருகி எம்மை இரங்கிஅன் றளித்தாய் மற்றும் இன்றொரு பண்டன் றன்னால்
 உரங்கெழும் அடியேம் ஆவி முழுவதும் உய்யக் கொண்டு
 வரங்கிளர் கருணை கூர்ந்த வள்ளலே போற்றிபோற்றி.    18
 |       அலைகளையுடைய திருப்பாற்கடல் உமிழ்ந்த வடவானலத்தை ஒக்கும்    விடத்தைப்பருகி அந்நாள் எங்களை அருள்செய்து காத்தனை. மேலும்,
 இந்நாள் ஓர் பண்டாசுரனால் நேர்ந்ததுன்பம் நீக்கி வலியுடைய அடிமையேம்
 உயிர்கள் அனைத்தினையும் பிழைக்குமா றுட்கொண்டு மேன்மைமிகுந்த
 அருள் மீக்கூர்ந்த வள்ளலே வணக்கம்.
 		| சைவச்செந் தழலின் யாங்கள் ஆகுதிச் சமிதை யாகச் செய்வித்து வேள்வி யாற்றுஞ் சிவபிரான் அருளி னாலே
 உய்வித்து மீள எம்மை உதவிய கருணை நாட்டத்
 தெய்வப்பூங் கொம்ப ரன்ன செல்விநின் சரணம் போற்றி.  19
 |  |