| வெள்ளக் கம்பர்	 		| வாலிய சிந்தையான் மலர்ப்பொ குட்டணை மேலவன் வழிபடும் வெள்ளக் கம்பனை
 ஆலிய அன்பினால் அருச்சித் தேத்துவார்
 தோலுடற் பொறைகழீ இத் தூய ராகுவார்.         86
 |       தூய சிந்தையொடும் பிரமன் வழிபடும் வெள்ளக் கம்பரைத் தழைத்த    அன்பொடும் அருச்சித்துப் போற்றுவோர் உடற்பாரம் தவிர்ந்து (பிறவி நீங்கி)
 தூயராவர்.
      கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்தொடும் பூசிக்கப் பெற்றமையின்    வெள்ளக் கம்பர் ஆயினர்.
 கள்ளக் கம்பர்	 		| மருள்புரி கருத்தினான் மாயன் ஏத்தலின் கருதும்அப் பெயரிய கள்ளக் கம்பனைத்
 திருவடி வழிபடப் பெற்ற சீரியோர்
 உருகெழு கொடுவினை மைய லுட்படார்.          87
 |       திருமால் மயக்குறுத்தும் கருத்தொடும் வழிபடலால் விளங்கும் கள்ளக்     கம்பரை வணங்கும் சிறப்பினர் அச்சத்திற்குக் காரணமாகிய கொடியவினை
 மயக்கத்துள் தொடக்குறார்.
 நல்ல கம்பர்	 		| உருத்திரன் நலத்தகும் ஒருமை பூண்டுயர் கருத்தொடும் வழிபடு நல்ல கம்பனை
 அருத்தியின் வழிபடும் அடியர் எம்பிரான்
 மருத்தபூந் திருவடிக் கலப்பின் மன்னுவார்.        88
 |       உருத்திரர் ஒன்றுபடும் நல்ல நினைவுடன் வழிபடும் நல்ல கம்பரைப்    பேரன்பினால் வழிபடும் அடியவர் எம்முடைய பெருமானார் தம் மணம்
 கமழும் மலரடிக் கலப்பினாலே எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
 		| கருதரு நல்லனே கள்ளன் வெள்ளனேர் தருதிரு வேகம்பன் என்று தன்னொடு
 மருமலர்க் கவிழ்இணர் மாவின்! நீழல்வாழ்
 ஒருவனே நால்வகை உருவம் மேயினான்.         89
 |       மணந்தங்கிய மலர்களைக் கொண்ட மாவடியில் எழுந்தருளியுள்ள    ஒருவரே சிந்தித்தற்கரிய நல்ல கம்பர், கள்ளக் கம்பர், வெள்ளக் கம்பர்,
 வெளிப்படுகின்ற திருவேகம்பர் என நால்வகைத் திருவுருத் தாங்கினர்.
 		| தென்னுயர் கச்சியின் அகில சித்தியும் மன்னுயிர்க் குதவிய மகிழ்ந்து நம்பிரான்
 அன்னணம் பூசைகொண்ட டருளி மூவர்க்கு
 முன்னிய வரங்களும் முறையின் நல்கினான்.       90
 |  |