|      அழகுமிகும் காஞ்சியில் எல்லா வேண்டுகோளையும் பல்லுயிர்க்கும்    உதவுதற் பொருட்டு நமது பெருமானார் பூசனையை ஏற்றுக்கொண்டு
 மூவர்க்கும் முறையே வரங்களை வழங்கினர்.
 இறைவி வேண்டுகோள்	 		| இறைவிஇம் மாநிழல் இனிது வைகிய மறைமுதல் அடியிணை வழிபட் டேத்துபு
 நிறைபெரு மகிழ்ச்சியின் நீடு காதலாற்
 குறைவறு வரம்பல குறித்து வேண்டுவாள்.         91
 |       பெருமாட்டியார் மா நீழலில் வீற்றிருக்கும் வேத முதல்வரை வணங்கி     ஏத்தி நிறைந்த பெருமகிழ்ச்சியிற் றங்கிய மெய்யன்பினால் நிறைவுறு வரம்
 பலவும் திருவுள்ளம் கொண்டு வேண்டுவார்.
 மேற்படி வேறு	 		| வேதக் கோவண வேதப் புரவிய வேதப் பூணவ வேத முதல்வனே
 வேதத் தானும் உணர்வரு மேதகாய்
 வேதச் செல்வஎன் விண்ணப்பங் கேள்மதி.        92
 |       வேதத்தைக் கோவணமாகவும், குதிரைகளாகவும், அணிகளாகவும்,    கொண்ட வேதநாயகனே! வேதத்தாலும் அறிவறிய பெருந்தகையே! வேதப்
 பொருளே! என் வேண்டுகோளை ஏற்றருள்க.
 		| மன்ற லார்மறை மானுவின் அடித்தலத் தென்றும் மேவுதி யேனுமி யோகியர்க்
 கன்றித் தோன்றிலை யாயினை ஈண்டினி
 மன்ற யாவர்க்குங் காட்சி வழங்குவாய்.           93
 |       மணமும், மங்கலமும் உடைய வேதமா மரத்தின் மூலத்தில் என்றும்     வீற்றிருப்பை ஆயினும் யோகியர்க்குக் காட்சி தருகின்றனை. பிறர்க்கு
 அரியை ஆகின்றாய். இங் கினித் தெளிவாக யாவர்க்கும் திருக்காட்சி
 வழங்குவாய்.
 		| தெள்ளு தீம்புனல் இத்திருக் கம்பையும் வள்ளல் ஓரிடைக் காண்டக மன்னுகென்
 றொள்ளி ழைக்கிரி உத்தமி வேண்டலும்
 பிள்ளை வெண்பிறைக் கண்ணியன் பேசுமால்.      94
 |       தெள்ளிய இனிய தீர்த்தமாகிய கம்பாநதியும் வள்ளலே! ஒப்பற்ற     இத்தலத்திற் புலப்பட மன்னுக என்றிமயவல்லி வேண்டிய அளவிலே
 இளம்பிறை சூடிய பெருமானார் மறுமாற்றம் அளிப்பர்.
 இறைவன் கூறல்	 மேற்படி வேறு	 		| மன்னுயிர் முழுவதும் பயந்த மாணிழாய் அன்னவை உய்யுமா கருதி அன்பினால்
 |  |