| பெருகின. அறங்கள் விளங்கின. வேள்வி பலவும் நிகழ்ந்தன, பரவின     இறைவன் பொருள்சேர் புகழ்கள். வேதாகம உண்மைகள் தழுவப்பெற்றன.
 உயிர்களெல்லாம் களிப்பாற் பொலிந்தன.
 		| வெறிமலர்த் தளவ மூரல் விழியிணை மறைத்து நீ்க்குஞ் சிறுபொழு துலகுக் கெல்லாம் எண்ணில்பல் லூழி சென்று
 மறைநெறி படைப்புச் செய்கை யாதிய மறுத்த வாற்றால்
 இறைவிதன் வதனம் நோக்கி ஏந்தலார் அருளிச் செய்வார்.   34
 |       முல்லை யரும்பினை ஒக்கும் பற்களையுடைய பெருமாட்டியார்    பிரானாரின் கண்களைப் புதைத்து நீக்கிய அச்சிறிய பொழுது
 உலகுயிர்களுக்கு அளவில்லாத ஊழிக் காலங்கள் கழிந்து வேதவிதிப்படி
 நிகழும் சிருட்டி முதலியன தடைப்பட்டமையால் பெருமானார் அம்மையார்
 திருமுகம் நோக்கி அருள் செய்வர்.
 இறைவன் இறைவிக்குப் பணித்தல்	 		| இருசுடர் தமக்கா தார மாகிய எமது கஞ்சத் திருவிழி புதைத்த வாற்றால் படைப்பாதிச் செய்கை மாறி
 உருகெழு தீமை நின்னை உற்றதால் அதற்குத் தீர்வு
 மருமலர்க் குழலி னாய்நீ மரபுளி இயற்றல் வேண்டும்.    35
 |       சூரிய சந்திரர் தமக்குப் பற்றுக் கோடாகிய எம்மலரனைய    திருவிழிகளைப் புதைத்தமையால் சிருட்டி முதலியன நிகழாது வெருவத்தக்க
 பாவம் நின்னைப் பற்றியதாகலின் அப்பாவம் தீர ஏலவார்குழலீ! நீ விதிப்படி
 பிராயச்சித்தம் செய்தல் வேண்டும்.
 		| இகப்பருங் கருணை பூண்ட எமக்கும்நின் றனக்கும் நந்தம் அகத்தடி யவர்க்கும் பாவம் அணுகுவ தில்லை யேனும்
 வகுத்தவா புரிதி எல்லாக் கருமமும் மரபி னால்யாம்
 நிகழ்த்திய வாறே பற்றி நிகழ்த்திடும் உலகங் கண்டாய்.   36
 |       உனக்கும், நம் அடியவர்க்கும், நீங்காத பெருங்கருணை பூண்ட    எமக்கும் பாவம் பற்றுதல் இல்லையானாலும் வேத விதிப்படி செய். எல்லாச்
 செயல்களும் யாம் செய்யவே உலகோர் பின்பற்றிச் செய்வரென அறி.
 ‘அகத்தடிமை செய்யும் அந்தணன்’ (சுந்தரர்)
 		| என்றருள் செய்யக் கேட்டு நடுக்கமுற் றிறைஞ்சி நின்று மன்றலங் குழலாள் கூறும் வள்ளலே கழுவாய்ச் செய்கை
 என்றதி யாது செய்யுங் காலமே திடமே தெல்லாம்
 நன்றெனக் கருளாய் என்ன நம்பனார் வகுத்துச் சொல்வார்.  37
 |       என்று அருள் செய்யக்கேட்டு நடுங்கி வணங்கி எழுந்து    வள்ளலே! பிராயச்சித்தம் யாது? அதனைச் செய்தற்குரிய காலமும், இடமும்,
 பிறவும் விரித்துரைப்பீரென ஏலவார்குழலியம்மை விண்ணப்பிக்க நம்பனார்
 வகுத்துரைப்பார்.
 |