| சுமத்தலும், அரைக் கணத்தில் பொலிவுடைய மூவுலகங்களுக்கும் சென்று    மீளுதலும் ஆகிய இவ்வற்புதச் செய்கை எனக்கு அல்லாமல் வேறு யார்க்கு
 உள்ளன வாகும்,’’
 		| என்றிது புள்ளர சியம்பக் கேட்டலும் நன்றெனக் குறுநிலா நகைமு கிழ்த்தரோ
 இன்றிதன் செருக்கெலாம் இடப நாயகம்
 ஒன்றறக் களையுமென் றுளத்தி லெண்ணினான்.     83
 |       என் றிதனைப் பெரிய திருவடி கூறக்கேட்டபொழுது அதன் பேதைமை    பொருளாக நகைத்து இன்றே இதன் இறுமாப்பினை முற்றவும் இடபதேவர்
 சிறிதும் விடாது களையும் என்றுட்கொண்டனர்.
 		| மெய்யுரை விளம்பினை உலக மீமிசை ஐயநிற் கிணைஎவர் ஆரும் இல்லெனக்
 குய்யம்வைத் தணிமுடி துளக்கிக் கூறினான்
 செய்யவள் வனமுலை திளைக்கும் மார்பனே.       84
 |       இலக்குமியின் அழகிய கொங்கைதோய் மார்பினராகிய திருமால்,     ‘ஐயனே! மெய்யுரையே விரித்தனை. உலகில் நினக்கொப்பவர் ஒருவரும்
 இலர்’ என உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று கூறி அழகிய திருமுடியை
 அசைத்துக் கூறினர்.
 		| வார்சடைப் பிரான்அடி வணங்கு வாம்எனாப் போர்வலிப் புள்ளொடும் கயிலை புக்கனன்
 ஏர்கெழு போகமா புரத்தின் எல்லைஅவ்
 வூர்தியின் இழிந்துசென் றுங்கண் எய்தினான்.      85
 |       நீண்ட சடைமுடிப்பிரானாரை வணங்குவோம் என்று போர்     வலிமையையுடைய கருடனொடும் கயிலையை அடைந்து அழகிய
 போகபுரத்தின் எல்லையில் அவ்வூர்தியினின்றும் இறங்கிச் சென்றவ்விடத்தை
 எய்தினர்.
 		| ஐந்ததாம் ஆவர ணத்தின் எம்மெதிர் ஐந்துகோ மாதர்சூழ்ந் தணுகி வைகவாழ்
 மைந்துடை விடைஅவண் மாய னோடுறும்
 வெந்திறற் புட்குல வேந்தைக் கண்டதால்.        86
 |       ஐந்தா மதிலிடமாகிய இங்கு நம் முன்னர் ஐந்து பசுக்கள் சூழ்ந்    துடனிருக்க வாழும் வலிமையுடைய இடப ஏறு அங்குத் திருமாலைச் சுமந்து
 வந்த பேராற்றலையுடைய புள்ளரசாகிய கருடனைக் கண்டது. கோமாதர்:
 நந்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை என்பன
 கருடன் துன்பம்	 		| தன்னெதிர் இகழ்ச்சியால் தருக்கும் ஆங்கதன் புன்னிலை நோக்குபு பொருக்கெ னச்சிரம்
 |  |