| 		| தன்னிடக் குறங்கினிற் சார்த்தித் துஞ்சுவ தென்னநெட் டுயிர்ப்பினிற் சிமிழ்த்த தேந்திழாய்   87
 |       ஏந்திய அணிகளையுடைய உமையே! தனக்கெதிரே இகழ்ந்து     இறுமாக்கும் அக்கருடனின் இழிநிலையை மனங்கொண்டு விரையத் தனது
 தலையை இடது துடையினிற் சார்த்தித் துயிலுதல் போன்று பெருமூச்சினிற்
 பிணித்தது.
 		| மாயவன் எம்மடி வணங்கி அன்பினான் ஆயிடை நெடும்பொழு தமர்ந்து வைகினான்
 பாய்விடை ஊர்திநெட் டுயிர்ப்பிற் பட்டுழல்
 காய்சினக் கலுழனும் கழிய நொந்ததே.            88
 |       ‘‘திருமால் எமது திருவடிகளை வணங்கி அன்பொடும் அந்நிலையில்    நெடும்பொழுது இங்குத் தங்கினன். பாய்ந்து செல்லும் ஊர்தியாகிய
 விடையின் பெரு மூச்சிற்பட்டு உயிர்ப்பினை வெளிவிடும் பொழுது நீளச்
 சென்றும் இழுக்கும்பொழுது நெருங்கியும் சுழலுகின்ற மிக்க சினமுடைய
 கருடனும் பெரிதும் வருந்தியது.”
 		| விட்டுவிட் டடக்குதோ றுயிர்ப்பின் வேகத்தால் அட்டநூ றியோசனை அவதி போந்துபின்
 கட்டெழில் காசியின் நுனிக்கண் சார்தரக்
 கொட்புறுத் தலைத்தது பறவைக் கோவினை.       89
 |       இங்ஙனம் பல்கால் உயிர்ப்பினை விட்டு விட்டு அடக்குந்தோறும்     அதன் வேகத்திற்பட்டு எண் ணூறியோசனை; எல்லை அளவாகச் செல்லவும்
 மிக்க அழகிய மூக்கினது நுனிவரை நெருங்கவும் கருடனைச் சுழல்வித்து
 வருத்தியது.
 		| ஒய்யென நெட்டுயிர்ப் புதைந்து மீள்தொறும் மெய்வயிற் சுஃஃறென விரிந்து கூம்பிடுஞ்
 செய்யபொற் சிறைகளிற் சிதைந்து புன்மயிர்
 துய்யென வெளியிடைச் சுழன்ற யாங்கணும்.        90
 |       விரையப் பெருமூச்செறிந்து உள்ளிழுக்குந்தொறும் அம்மூச்சுக் காற்றுக்    கருடனின் உடலில் தாக்கிச் சுஃறெனும் ஒலியுடன் விரிந்து குவியும் செவ்விய
 பொன்னிறச் சிறகுகளினின்றும் புல்லிய மயிர்கள் சிதைந்து பஞ்சுத் துய்யைப்
 போல வானின்கண் எவ்விடத்தும் சுழன்றன.
 		| அதிர்ந்தன விண்ணெலாம் அயர்ந்த திக்கயம் உதிர்ந்தன தருத்தழை உக்க மீன்கணம்
 பிதிர்ந்தன வரைக்குலம் பெயர்ந்த கோள்களும்
 உதிர்ந்தெழும் சினவிடை உயிர்ப்பின் மொய்ம்பினான்   91
 |  |