| 		| நாட்டும் அத்திருக் கூத்தினை நாங்களுங் காண வேட்ட னங்கள்மற் றதுபெறு நெறிவிரைந் தருளாய்.	167
 |       கேட்ட அப்பொழுதே, எதிரில் தரிசனம் பெற்றாற்போல மிக்கெழும் பெருவிருப்பம் மீக்கூர்ந்தெழுதலால் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, ‘விருப்புறுத்தும் அந்நடனத்தை அடியேங்களும் காண விரும்பினோம். அங்ஙனம் பெறற்குரிய வழியை எங்களுக்கு விரைந்தறிவுறுப்பீராக,’	 		| என்று பன்முறை வேண்டலும் ஈர்ந்தொடைத் துளவோன் நன்று நுங்கருத் தெனமிக நகைமுக மலர்ந்து
 குன்ற வில்லியார் சேவடி சிந்தையிற் கொண்டாற்
 கன்று நம்பர்தம் அருளினால் அறிவுவந் துதிப்ப.     168
 |       என்று பலமுறையும் விண்ணப்பிக்க அப்பொழுதே தேனால் ஈரிய    துழாய்மாலையைச் சூடிய திருமால் நும்முடைய விருப்பம் அழகிதுஎனப்
 பெரிதும் முகமலர்ந்து மேருமலையை வில்லாக உடையவர் திருவடியை
 மனத்துட்கொண்ட திருமாலுக்குச் சிவபெருமான் திருவருளினாலே
 அறிவுண்டாக.
 		| மல்லல் தெண்டிரை மறிகடல் மணிகள்கொண் டொதுக்கும் தில்லைக் கானுடைச் சிதம்பர வரைப்பில்எஞ் ஞான்றும்
 செல்வத் தாண்டவம் நவிற்றும்எம் பிரானெனத் தெளிந்தான்
 அல்லிப் பூமகள் முதலியோர்க் கன்னது செப்பி.        169
 |       வளமுடைய மறித்தெழும் திரையையுடைய கடல் மணிகளைக்     கரையிடைச் செலவுய்க்கும் தில்லை என்னும் மரங்களால் தில்லை எனப்
 பெயரிய சிதம்பர தலத்தில் எக்காலத்தும் திருவருட் செல்வமாகிய
 திருக்கூத்தியற்றும் எமது பிரானெனத் தெளிவுற்றனன், அதனால்,
 அகவிதழையுடைய தாமரை மலரில் வாழ்திருமகள் முதலானோர்க்கதனை
 உணர்த்தி,
 		| அங்கண் எய்திநாம் ஆளுடை நாயகன் திருமுன் பொங்கு காதலான் அடைக்கலம் புகுந்துபோற் றிசைத்துத்
 தங்கி மெய்த்தவம் இயற்றிடின் தண்ணருள் சுரந்து
 நங்க ளுக்கெதிர் காட்டுவன் ஆனந்த நடனம்.           170
 |       தில்லையை அடைந்து தலைவனார் திருமுன்னர் மிக்கெழும்    விருப்பினால் நாம் சரணம் புகுந்து போற்றுதலாகிய மெய்த்தவத்தைச்
 செய்தால் திருக்கருணை மீக்கூர்ந்து பேரின்பக் கூத்தை அங்கே நாம்
 காணக் காட்டுவர்.
 		| யோகி யோர்களும் எய்தருந் திருநடம் உரிமை யாகும் அன்புடை அடியவர்க் கெளியது கண்டீர்
 ஏகு வாம்இனி வம்மின்என் றவருடன் எழுந்து
 மாக வாற்றினால் வயங்கொளித் தில்லைவந் தடைந்தான்.    171
 |  |