| 		| இருள்பொதி மணிகண்டர் அடிதொழு திருமுந்நீர் பருகிய முனிவேந்தன் பையுளின் உரைசெய்வான்
 அருள்பெறும் அடியார்கட் கவரினும் இனியானே
 கருணையின் நிறைவேயான் கழிவது முறையேயோ.     262
 |       பெரிய கடல் நீரைப் பருகிய முனிவரரசு வருத்தத்தொடும் இருள்    பொதிந்த திருநீலகண்டர் திருவடிகளைத் தொழுது கூறுவர்; அருளைப்
 பெறும் அடியவர்கட் கவர் தம்மினும் இனியானே! கருணையின் சால்பே!
 யான் அகலுதல் தகவேயோ.
      ‘‘என்னினும் இனியான் ஒருவன்’’	(திருநாவுக்கரசர்.)	 		| மருவினர் பிரியொண்ணாய் மற்றிவ ரெல்லாம்நின் திருமண நிறைகோலங் காண்டகு திறல்பெற்றார்
 பெருமண நடுவேநீ பிரிகென எனை நீப்ப
 இருளுறு கொடியேன்இங் கெப்பிழை செய்தேனோ.   263
 |       மருவினர் பிரியொண்ணாய்! இவர் யாவரும் நினது நிறைந்த    திருமணக் கோலத்தைக் காணத்தகும் பேற்றினைப் பெற்றனர். பெரிய
 மண நிகழ்ச்சியில் நீ பிரிக என என்னை நீக்குமாறு அறியாமை மிகு
 தீவினையோன் இவ்விடத் தெப்பிழையைப் புரிந்தேனோ!
      பிரியாமையை வேண்டுவார் ‘மருவினர் பிரியொண்ணாய்’ என்றனர்.	 		| துணைவிய ரொடுவானத் தொல்லுல குடையாரும் பணமணி மணிநாகர் பாரிடர் முனிவோரும்
 மணவணி தொழுதுய்வான் இன்னமும் வருகின்றார்
 அணைவுறு தமியேனைத் தள்ளுவ தழகேயோ.       264
 |       விண்ணவரும், படத்திற்பொருந்திய மாணிக்கம் உடைய நாகரும்,     பூதகணங்களும், முனிவரரும் தத்தம் வாழ்க்கைத் துணைவியரொடும்
 மணக்கோலத்தைத் தரிசித் துய்யும் பொருட்டு மேலும் வருகின்றனர்.
 நெருங்கிய வேறோர் பற்றிலேனைத் தள்ளுதல் நன்றேயோ!
 		| விரைசெலல் முனிவோர்கள் விரைகெழு சுனைதோய்வார் அரசிலை குசைமற்றும் அன்புடன் எதிர்உய்ப்பார்
 கரகமும் இழைசூழ்வார் அவரொடு களியாமே
 தெருமர அடியேனைத் தள்ளுதல் சீரேயோ.         265
 |       விரைந்து செல்லுதலையுடைய ஐம்புலன்களை வென்ற முனிவோர்கள்     மணங் கமழும் சுனைகளில் மூழ்குவார். அரசிலையையும், தருப்பையையும்
 பிறவற்றையும் அன்பொடும் கொண்டு வருவார், கலசங்களுக்கு நூல்
 சுற்றுவார், அவரொடும் கூடி மகிழ்ந்து தொண்டு செய்யாமே மனம் வருந்த
 அடியேனைத் தள்ளுதல் சிறப்பேயோ!
 |