| 		| பாடுவர் சிலர் அன்பர் பரவுவர் சிலர்அன்பர் ஆடுவர் சிலர்அன்பர் அழுகுவர் சிலர்அன்பர்
 ஓடுவர் சிலர்அன்பர் உவரொடு மகிழாமே
 வாடுற அடியேனைத் தள்ளுதல் மரபேயோ       266
 |       பாடுவார் சிலரும், துதி செய்வார் சிலரும், ஆடுவார் சிலரும்,     அழுவார் சிலரும், ஓடுவார் சிலரும் ஆம் மெய்யன்பரொடும் கூடி
 மகிழாமே வாட்டமுறும்படி அடியேனைத் தள்ளுதல் வழக்கேயோ!
 		| ஒளிமணி மழைதூர்ப்பார் ஒண்மலர் மழைதூர்ப்பார் புளகமும் உடல்போர்ப்பார் புகழ்பல திசைபோர்ப்பார்
 அளவறு மகிழ்கூர்ப்பார் அவரொடு கலவாமே
 தளர்வுற அடியேனைத் தள்ளுவ தருளேயோ.     267
 |       ஒளியுடைய நவமணிகளையும், மழையை ஒப்பச் சொரிவார்;    விளக்கமுடைய மலர்களை மழைபோல வீசுவார்; மெய்யெலாம் மயிர்
 சிலிர்ப்பார்; புகழ்ச்சியை எண்டிசையினும் விரிப்பார்; எல்லையில்லாத
 மகிழ்ச்சிமீக்கூர்வார்; இங்ஙனம் மெய்யன்பராம் அவரொடும் கூடிச்
 செயற்படாமே வாட அடியேனை விலக்குதல் அருளின் வண்ணமோ!
 		| கண்டனம் மண இன்பங் காழுறு வினையெல்லாம் விண்டனம் உலவாத மேதகு சிவபோகம்
 கொண்டனம் என ஆர்ப்பார் அவரொடு குலவாமே
 தொண்டற அடியேனைத் தள்ளுதல் சூழேயோ.    268
 |       ‘கண்டனுபவித்தோம் மணவினை இன்பத்தை; திண்மைமிக்க தீவினை    முற்றவும் விடுத்தனம்; கெடாத மேன்மையுடைய சிவபோகத்தைக் கைக்
 கொண்டோம்; என் றாரவாரிப்பார் அவர்தம்முடன் கூடிய இன்புறாமே
 பணிகெடும்படி அடியேனைப் போக்குதல் திருவுள்ளக் குறிப்பேயோ!
 		| குழல்அவிழ் வதும்ஓராார் குழைவிழு வதும் ஓரார் இழைசரி வதும்ஓரார் எதிர்எதிர் மடமாதர்
 மொழியும்மங் கலஓதை இருசெவி முகவாமே
 கழிவுற அடியேனைத் தள்ளுதல் கடனேயோ.    	269
 |       கூந்தல் நிலைகுலைதலையும் மனங்கொள்ளார்; காதணி கழன்று    வீழ்தலையும் காணார்; அணிகள் பிறழ்வனவற்றையும் சிந்தியார்; எதிர்
 எதிராக மடமகளிர் கூறும் மங்கலப் பாட்டிசைகளை இருகாதுகளானும்
 முகந்து பருகாமல் கழிந்து போக அடியேனைத் தள்ளுதல் கடப்பாடோ!
 		| முனிவரர் கணநாதர் அயன்அரி முதலானோர் பனிஅறு கணிகாலைப் பேரிசை படமுன்பின்
 எனஎழு நிறைபூசல் கண்டினி துவவாதே
 மனமடி வுறஎன்னைத் தள்ளுதல் மாண்பேயோ.    270
 |  |