|      முனிவரரும், கணநாதரும், பிரமன்திருமால் முதலானோரும்    குளிர்ச்சியுடைய அறுகினை மணமக்கட்கு அணியும் பொழுது பேரொலி
 எழுமாறு ‘யாம்முன்னே நீவிர்பின்னே’ என எழும் நிறைந்த மாறுபடும்
 உரையைக்கேட்டினிது மகிழாமே மனந் தளருமாறு அடியேனை அகற்றுதல்
 பண்பேயோ!
      மணமக்கட்கு அறுகணிதல்; ‘அறுகெடுப்பார் அயனும் அரியும் அன்றி     மற்றிந்திரனோடமரர் நறுமுறு தேவர்கணங்களெல்லாம் நம்மிற் பின்பல்ல
 தெடுக்க வொட்டோம், செறிவுடை மும்மதி லெய்தவில்லி திருவேகம்பன்
 செம்பொற் கோயில்பாடி, முறுவற் செவ்வாயினீர் முக்கணப்பற் காடப்பொற்
 சுண்ணம் இடித்தும்நாமே, (திருவாசகம்), (நறுமுறு-மொறுமொறுக்கின்ற -
 முணுமுணுக்கின்ற) எனவும்,
      ‘ஒருபதி னாயிரம் திருநெடு நாமமும், உரிமையிற் பாடித் திருமணப்     பந்தருள், அமரர் முன்புகுந் தறுகு சாத்திநின், தமர்பெயர் எழுதிய
 வரிநெடும் புத்தகத், தென்னையும் எழுத வேண்டுவல்’ (கோயில்
 நான்மணிமாலை) எனவும் வருவனகாண்க.
 		| மண்டில மணிவேதி குண்டமும் மலிவித்திங் கெண்டிசை புகைவிம்ம எரியிடை இழுதூற்றித்
 தண்டிரள் பொரி அட்டுந் தகவது காணாமே
 விண்டிட அடியேனைத் தள்ளுதல் விழைவேயோ.  271
 |       குண்ட மண்டில வேதிகைகளை வகுத்து எட்டுத்திசைகளிலும் புகை    பொங்கிப் பரவ வேள்வித் தீயில் நெய்யைப் பொழிந்து நெற்பொரியைச்
 சொரியும் இனிய காட்சியைக் காணாமே நீங்குமாறு அடியேனை விலக்குதல்
 விருப்புடையதோ!
 		| ஒழுகொளி மணிவேய்ந்த கரகம துறுபால்மை விழிமனை யவள்வார்ப்ப வெற்பிறை நினதாள்கள்
 கழுவினன் மலர்தூவி வழிபடல் காணாமே
 அழிவுற அடியேனைத் தள்ளுதல் அறனேயோ.    272
 |       படர்கின்ற ஒளியுடைய மணிகள் பதித்த பொற்கரத்தில் உள்ள     பாலை மையுண்டகண்ணினையுடைய மேனாதேவி ஒழுகவிட மலையரையன்
 தேவரீருடைய திருவடிகளைக் கழுவினனாய் மலர்களைத் தூவி அருச்சனை
 புரிதலைக் காணாமல் மெலிவுறும்படி அடியேனைப் புறம்போக்கல்
 அறச்செயல் ஆமோ!
 		| காரொடு நிகர்கூந்தற் கன்னியை மலைவேந்தன் நீரொடு நின்கையில் உதவிடு நிறைகோலம்
 ஆரொடு மதிவேய்ந்த அங்கண காணாமே
 பேரிடர் உறஎன்னைத் தள்ளுதல் பெட்பேயோ.    273
 |  |